HOME      Lecture      அழைப்பாளருக்கு சரியான கல்வியின் அவசியம் | Tamil Bayan - 678   
 

அழைப்பாளருக்கு சரியான கல்வியின் அவசியம் | Tamil Bayan - 678

           

அழைப்பாளருக்கு சரியான கல்வியின் அவசியம் | Tamil Bayan - 678


அழைப்பாளருக்கு சரியான கல்வியின் அவசியம்
 
தலைப்பு : அழைப்பாளருக்கு சரியான கல்வியின் அவசியம்
 
வரிசை : 678
 
இடம் : ஜமிஅத் அஹ்லே ஹதீஸ், வேலூர் மாவட்டம் கூகுள் மீட் வழியாக
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 30-05-2021 | 18-10-1442 
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வுடைய அருளால் இந்த லாக்டௌனில் நமக்கு ஒரு கல்வி அமர்வை அல்லாஹுதஆலா ஏற்பாடு செய்து கொடுத்தான். அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.
 
இந்த கல்வி அமர்வு எனக்கும் உங்களுக்கும் பயனுள்ள ஒரு அமர்வாக நம்முடைய இல்மையும், ஈமானையும், அமலையும், தக்வாவையும், இக்லாசையும், அதிகப்படுத்தக்கூடிய ஒரு அமர்வாக ஆகவேண்டும்.
 
என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொள்கிறோம். அல்லாஹு ஸுபஹானஹுவதஆலா அப்படியே ஆக்கி அருள்வானாக. சகோதர்களே தாய்மார்களே! இன்று நாம் நம்முடைய இந்த அமர்வுக்காக எடுத்துக்கொண்ட தலைப்பு உழைப்பாளர்களுக்கு சரியான கல்வியின் அவசியம்.
 
அழைப்பாளர்கள் என்றால் யார்? (யாரெல்லாம் அல்லாஹ்வுடைய அடியார்களை,) அல்லாஹ்வை வணங்குவதில் பக்கம் அழைக்கிறார்களோ, யாரெல்லாம் அல்லாஹ்வுடைய அடியார்களை மனித சமுதாயத்தை அல்லாஹ்வுடைய மார்க்கமாகிய இஸ்லாமின் பக்கம் அழைக்கிறார்களோ,
 
அல்லாஹ்வுக்காக மட்டும் என்று, யாரை அழைக்கிறார்களோ, அவர்கள் தாயிகள். அல்லாஹ்வுடைய அடியார்களில் அல்லாஹ்வுடைய தீன் பக்கம், அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம்,
 
இஸ்லாமின் பக்கம், அல்லாஹ்வுடைய இபாதத்தின் பக்கம், அல்லாஹ்வுக்காக மட்டும் என்று, ஏக்கத்துடன் எந்தவிதமான பெயர் புகழை விரும்பாமல் எந்தவிதமான உலக ஆதாயங்களை விரும்பாமல், தேடாமல் யார் செய்கிறார்களோ அவர்கள் தான் தாயிகள்.
 
அத்தகைய தாயிகளுக்கு சரியான இல்முடைய அவசியம். ஏன்? கல்வி என்றால் இரண்டு வகையாக இருக்கிறது. முதலாவது அது வீணான கல்வி. மற்றொண்டு  (இல்முன் ஸஹீஹ்)  சரியான இல்மாகும்.
 
எது வீணான இல்ம் என்றால் . எந்த இல்ம் மனிதனை அல்லாஹ்விடம் சரியாக கொண்டுபோய் சேர்க்கவில்லையோ, எந்த இல்ம் நேர்வழியின் பக்கம் வழிகாட்ட வில்லையோ, எந்த இல்ம் அமல் வரைக்கும் மனிதனைக் கொண்டு சேர்க்க வில்லையோ அந்த இல்மு. வீணான இல்மாகும்.
 
அது போன்று எந்த இல்மின் மூலமாக தக்வா வரவில்லையோ, அதுபோன்று எந்த இல்முன் மூலமாக உண்மையான நேர்வழி குர்ஆன் சுன்னா உடைய அறிவு கிடைக்கவில்லையோ, குதர்க்கமும் தர்க்கமும் விதண்டாவாதமும், வீண்பேச்சுகளும், புகழை விரும்புதலும், இருக்கிறதோ அது வீணான இல்மு.
 
சரியான இல்ம் என்றால் எது? எந்த இல்மை அல்லாஹ் குர்ஆனில் இறங்கினானோ, எந்த இல்மை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுன்னாவில் நமக்கு கற்றுக் கொடுத்தார்களோ, எந்த இல்மை ஸகாபாக்கள் கூறினார்களோ, எந்த இல்மை தாபியீன்கள் கூறினார்களோ அதுதான் சரியான இல்ம்.
 
அந்த இல்மு ஒரு தாயிக்கு எவ்வளவு அவசியம். தாயீ இல்மு என்ற அந்த ஆயுதத்தைக் கொண்டு தன்னை எப்படி தயார் படித்தியவராக இருக்க வேண்டும். இல்மு என்ற அந்த தன்மையை கொண்டு, தகுதியை கொண்டு, தன்னை அப்படி அவர் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
அது பற்றி தான் இன்ஷா அல்லாஹ் இந்த அமர்விலே நாம் பார்க்க இருக்கிறோம். இந்த அமர்வினுடைய முதல் ஒரு வசனமாக அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா ஸூரத்துல் முஜாதிலா உடைய 11வது வசனத்திலே ரப்புல் ஆலமீன் கூறுகிறான்.
 
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ 
 
உங்களில் நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துவான். இன்னும் கல்வி கொடுக்கப்பட்டவர்களை பல தகுதிகள் அவன் உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 58 : 11)
 
இந்த வசனத்தை நாம் அறிந்துகொண்டு உள்ளே செல்வோம். இந்த வசனம் என்ன கூறுகிறது. அல்லாஹுதஆலா உயர்த்துவான். யாரை முஃமீன்களை, நம்பிக்கையாளர்களாகிய, உங்களை அல்லாஹுதஆலாஉயர்த்துவான், கண்ணியப்படுத்துவான். 
 
கண்டிப்பாக, அல்லாஹ்வுடைய உயர்வு முஃமின்களுக்கு உண்டு. உலகத்தில் இப்போது முஃமின்கள் எங்கேயாவது அவர்கள் தாழ்மை படுத்தப்பட்டு இருந்தாலும், சிறுமை படுத்தப்பட்டு இருந்தாலும், கண்டிப்பாக அவர்கள் ஈமானில் உறுதியாக இருந்தால்,
 
அவர்கள் தாவா செய்து கொண்டு இருந்தால் அவர்களை அல்லாஹ் உயர்த்துவான்! அல்லாஹுடைய வாக்கு உண்மை. ஒருவர் தாவா செய்யும் பொழுது அதை நான் இந்த இடத்திலே சொல்லிக் கொள்கிறேன். இந்த உறுதியோடு தான் அவர் செய்ய வேண்டும்.
 
கண்டிப்பாக இறுதி நல்ல முடிவு அல்லாஹ்வுடைய நல்லடியார்களுக்கு தான். இறுதி வெற்றி மூஃமின்களுக்கு தான். இறுதி கண்ணியம் இம்மையிலும், மறுமையிலும், முஃமீன்களுக்குத்தான். என்ற அந்த உறுதியோடு இஸ்லாம் எல்லா மார்க்கங்களை விட ஓங்கி உயரும் என்ற அந்த மன உறுதியோடு ஒரு தாயீ தாவா செய்ய வேண்டும். அல்லாஹுதஆலா மூஃமின்கள் ஆகிய உங்களை கண்ணியப்படுத்துவான்.
 
இன்னும், இல்ம் கொடுக்கப்பட்டவர்களை மேலும் பல படித்தரங்கள். மேலும் பல தரஜாத்துகளை அல்லாஹுதஆலா உயர்த்துவான். சூரத்துல் முதாஜிலா உடைய பதினோராவது வசனத்திலே, நமக்கு அல்லாஹுதஆலா ஒரு தெளிவை கொடுக்கிறான். ஈமானுக்கு அடுத்ததாக, ஈமானுக்கு அடுத்ததாக, இல்மு ரொம்ப முக்கியம்.
 
இல்மை கொண்டு அல்லாஹ்விடத்திலே கண்ணியத்தை அடையமுடியும். இந்த வசனத்திற்கு ஷேக் உசைமின் ரஹிமஹுல்லாஹ் விளக்கம் கூறும்போது என்ன சொல்கிறார்கள். என்றால்,
 
ஒரு இஸ்லாமிய அழைப்பாளர் அவர் ஒரு ஒளியாக இருக்கிறார். (அத்தாயியதுல் ஆலிம்) கல்வி கற்ற இஸ்லாமிய அழைப்பாளர். (நூருன்) அவர் ஒரு ஒளியாக இருக்கிறார். அவர் மூலமாக மக்கள் தங்களுடைய உலக காரியங்களிலும், தங்களுடைய தீன் உடைய காரியங்களிலும், நேர்வழியை, வெளிச்சத்தை பாதையை அறிகிறார்கள்.
 
இல்மு உள்ள தாயீ உதாரணத்திற்கு, நீங்கள் ஒருவரை மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறீர்கள். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறார். என்றவுடன், அவர் இப்போது யாரை பார்ப்பார்? அவரை இஸ்லாமின் பக்கம் அழைத்து யாருடைய கையில் அவர் கலிமா சொன்னாரோ, அவரை பார்ப்பார்.
 
அவர் எப்படி தொழுகிறார் அவர் எப்படி நோன்பு வைக்கிறார் அவருடைய குணங்கள் எப்படி அவருடைய ஒழுக்கம் எப்படி அவருடைய பேச்சு எப்படி இருக்கிறது. அவரின் நடை எப்படி இருக்கிறது அவர் என்ன உடுத்துகிறார் இப்படியாக அவர்களை பார்த்து பார்த்து அந்த மனிதர் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட அந்த மனிதர் இஸ்லாமை கற்பார்.
 
தனது வியாபாரங்களில், தனது தொழில் துறைகளில் எது கூடும் எது கூடாது என்று இருக்கும் பொழுது அந்த அழைப்பாளர் இடத்திலே கேட்பார். இந்த ஒரு விஷயம் போதுமானது ஒரு அழைப்பாளருக்கு இல்மு எந்த அளவு முக்கியம் என்பது புரிந்து கொள்வதற்கு.
 
எப்படி இஸ்லாமை ஏற்றுக்கொண்ட ஸஹாபாக்களுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்மாதிரியாக வழிகாட்டியாக இருந்து வழிகாட்டினார்கள். ஸஹாபாக்கள் நபியை பின்பற்றினார்கள் .அதுபோன்று இஸ்லாமை ஏற்றுக்கொண்ட தாபியீன் களுக்கு ஸஹாபாக்கள் வழிகாட்டிகளாக இருந்து வழிகாட்டினார்கள்.
 
தாபியீன்கள் ஸஹாபாக்களை பின்பற்றினார்கள்.அது போன்று. சகோதரர்களே! தாயீகளே! ஒரு அழைப்பாளர் தான் யாரை இஸ்லாமின் பக்கம் அழைகிறாரோ அவர் தன்னை பின்பற்றி நடப்பதற்கு தான் தகுந்தவராக இருக்க வேண்டும், அதற்கு தகுதி உள்ளவராக அல்லாஹ் என்னை ஆக்கவேண்டும்.
 
என்று அவர் உறுதியில் இருக்கவேண்டும். அப்போது அந்த தகுதிக்கு அவருக்கு வெறும் அழைத்தல் என்ற அந்த பணி மட்டும் போதாது. அவருடைய அந்த அழைத்தல் என்ற அந்தப் பணியோடு அவர் இடத்திலே கல்வி அமல். அமளோடு சேர்ந்த கல்வி. கல்வியோடு சேர்ந்த அமல். எனது வார்த்தையை பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
 
அவரிடத்தில் அமளோடு சேர்ந்த கல்வி கல்வியோடு சேர்ந்த அமல் தேவை. இதுதான் நாம் சரியான இல்ம் என்று சொல்கிறோம். இது ஒரு அர்த்தம். சரியான இல்முக்கு. இரண்டாவது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்திலே குழப்பங்கள் இல்லை. வஹீ இறங்கிக் கொண்டு இருந்தது. எல்லாவற்றையும் வஹீ தெளிவுபடுத்தியது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெளிவுபடுத்தினார்கள்.
 
ஸஹாபாக்கள் உடைய காலத்திலே, உஸ்மான் (ரலி) அன்ஹு அவர்களுடைய காலத்திற்குப் பிறகு இந்த உம்மத்திலே குழப்பவாதிகள் தோன்றினார்கள். மார்க்கத்தில் மன இச்சையை புகுத்தினார்கள். சுயசிந்தனைகளை புகுத்தினார்கள்.
 
அப்போது எது உண்மையான குர்ஆன் சுன்னா எது உண்மையான தீன் என்பதை அறிவதற்கு ஒரே ஒரு உரைகள் தான் அங்கே நமக்கு நீதமாக இருந்தது. நீதமாக இப்போதும் அதுதான் இருக்கிறது. அதுதான்.
 
ஸஹாபாக்கள் உடைய வழிமுறை. உஸ்மான் ரலி அன்ஹு அவர்களுடைய காலம் வரை. ஸஹாபாக்கள் எதிலே ஒருமித்து இருந்தார்களோ, அது தான் நமக்கு மன்ஹஜ். அதுதான் நமக்கு, அந்தக் கொள்கை தான் அவருடைய கொள்கை தான் நமக்கு கொள்கை.
 
இத்தகைய ஒரு மன்ஹஜ்யை. இத்தகைய ஒரு வழியை நாம் ஒரு சரியான இல்மு என்று கூறுகிறோம். சரியான இல்மு என்பதற்கு இரண்டாவது கருத்து என்னவென்றால். எப்போதெல்லாம் இந்த குழப்பங்கள் உருவாகியது.
 
அதாவது உஸ்மான் ரலி அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டதற்கு பிறகு அங்கே நமக்கு உண்மையை அறிந்து கொள்வதற்கு, நேர்வழியை அறிந்து கொள்வதற்கு, சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு நமக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு உரைகள் அது ஸஹாபாக்களின் பாதையாகும். 
 
இன்றும் அதுதான் நமக்கு மீதமிருக்கிறது. இன்றும் கொள்கை சார்ந்த வழி கேடுகளுக்கு பஞ்சமில்லை. கொள்கை சார்ந்த குழப்பங்களுக்கு பஞ்சமில்லை. மக்கள் சுயசிந்தனைகளை, சுய கருத்துக்களை, மார்க்கத்திலே புகுத்தி வழிகேடுகளை மலிவு ஆக்கிவிட்டார்கள்,
 
வழி கேடுகளை அதிகமாக்கி விட்டார்கள், வழிகேடுகளின் கிளைகளை உருவாக்கி விட்டார்கள். நேர்வழி எது என்று திகைத்து நிற்கக்கூடிய சூழ்நிலையிலே ஒரு முஸ்லிம் இப்போது இருக்கிறான். ஆகவே அந்த நேர்வழியை சரியாக தெரிந்து கொள்வதற்கு நம் இடத்திலே இருக்கக்கூடிய ஒரே ஒரு வழி இப்போது அந்ததான் ஸகாபாக்களுடைய வழியாகும்.
 
குர்ஆன் சுன்னாவை ஸஹாபாக்கள் உடைய அந்த விளக்கத்தோடு, ஸஹாபாக்கள் உடைய அறிவோடு சேர்ந்து புரிந்து கொள்வது. இதுகுறித்து இன்ஷா அல்லாஹ் நீங்கள் என்னென்ன புத்தகங்களை படிக்க வேண்டும். என்பதை நாம் இந்த அமர்வின் உடைய இறுதியிலே கூறுவோம்.
 
இப்போது மீண்டும் நாம் இன்னும் நம்முடைய தலைப்புக்கும் உள்ளே செல்வோம். ஒரு அழைப்பாளர் தன்னுடைய அகீதாவை கொள்கையை சரிசெய்யவேண்டும். தன்னுடைய இபாதத்தை சரி செய்ய வேண்டும். இது ரெண்டும் ரொம்ப முக்கியம். ஏன்?
 
அழைப்பாளரே ஓட்டையான வராக இருந்தால் அழைப்பாளரே கொள்கையிலும் இபாதத்திலும் பிரச்சனை உள்ளவராக இருந்தால் அவர் எந்த ஒரு சரியான கொள்கையின் பக்கம் அல்லாஹ்வுடைய அடியார்களை அழைப்பார்.
 
ஆகவே முதலில் அழைப்பாளர் இடத்திலே சரியான கொள்கை. அகீதா சரியாக இருக்க வேண்டும். அதுபோன்று சரியான இபாதத்,  சரியான சுன்னா, (சுன்னாவின் அடிப்படையிலே அமைந்த இபாதத் இருக்கவேண்டும்.) 
 
இந்த இரண்டுமே முதலில் அகீதாவுடைய இல்ம். இபாதத்துடைய இல்மு அவர் இடத்திலே சரியாக வேண்டும். இதற்கு அவர் மார்க்க அறிஞர்களை, உலமாக்களை, நாடவேண்டும். இதற்கு அவர் நல்ல ஆசிரியர்களை தேட வேண்டும்.
 
நல்ல நூல்களை அவர் தன்னுடைய தோழர்களாக தன்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அலைஹி அவர்கள் சொல்கிறார்கள்.
 
இல்ம் இரண்டு வகை இல்மாக இருக்கிறது. ஒன்று (இல்முன் ஃபில் கல்பி) இன்னொன்று, (இல்முன் அல்லிஸான்) ஒன்று உள்ளத்தில் உள்ள இல்மு. இன்னொன்று நாவிலே இருக்கக்கூடிய இல்ம்.
 
எந்த இல்ம் உள்ளத்திலே இருக்கிறதோ, அந்த இல்ம் தான் பலன் தரக்கூடிய இல்ம். எந்த இல்மு நாவிலே இருக்கிறதோ அந்த இல்ம். உங்களுக்கு எதிரான சாட்சியாக நாளை மறுமையில் அல்லாஹ்விடத்திலே இருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக. என்ன சொல்கிறார்கள் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹு அலைஹி.
 
இல்மு இரண்டு வகை. ஒன்று உள்ளத்திலே உள்ள இல்ம். எந்த அகீதாவை நாம் படிக்கிறோமோ. சரியான அகீதாவை அந்த அகீதா உள்ளத்திலே வரவேண்டும். குர்ஆன் ஹதீஸில் இருந்து நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளை தெரிந்து கொள்ளும்போது அந்த வணக்க வழிபாடுகள் நம்மிடத்தில் வெளிப்பட வேண்டும்.
 
வணக்க வழிபாடுகள் சுன்னத்தான முறையில் இருக்கவேண்டும். நல்லா கவனிங்க.அப்போதுதான் அது உள்ளத்தில் உள்ள இல்மாக எடுத்துக்கொள்ளப்படும். நாவிலுள்ள இல்ம் என்றால் என்ன?
 
ஒரு மனிதர் பேசுகிறார். பயான் பேசுறதுலே பிரச்சாரம் செய்வதிலே ரொம்ப பிரமாதம். ரொம்ப பிரமாதம். அவர் பேச்சை கேட்ட மக்கள் சொக்கி விழுகிறார்கள். அவர் பேச்சைக் கேட்பதற்கு என்று 100 கணக்கிலே 1000 கணக்கிலே மக்கள் வருவார்கள்.
 
அவருடைய பேச்சை கிளப்பாக எடுத்து லட்சக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் அவரிடத்தில் அகீதா சரி இல்லை. அவர் இடத்திலே இபாதத் இல்லை வணக்க வழிபாடு இல்லை. என்றால். இந்த இல்மை பற்றி ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அலைஹி என்ன சொல்கிறார்கள்.
 
இது நாவின் உடைய இல்ம். இந்த மனிதனுடைய உள்ளத்திலே இல்மு கல்வியிலே இறங்கவில்லை. நாவிலே தான் இந்த இல்மு இருக்கிறது‌. நாளை மறுமையில் இந்த இல்ம் இவருக்கு எதிராக அல்லாஹ் இடத்திலே காட்சியாக அமைந்துவிடும்.
 
இந்த இடத்திலே இன்னொரு உதாரணத்தை சொல்ல ஆசைப்படுகிறேன். அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இல்மின் படி அமல் செய்யக் கூடிய நற்பாக்கியத்தைத் தருவானாக. அமல் இல்லாத இல்மை விட்டு அல்லாஹுதஆலா என்னையும், உங்களையும் பாதுகாப்பானாக. தக்வா வையும் நேர்வழியையும் அமலையும் அதிகப்படுத்தக்கூடிய இல்மை அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நசீப் ஆக்குவானாக.
 
அறிஞர் கசாலி ரஹிமஹுல்லாஹ் உதாரணம் சொல்கிறார்கள்.(மக்களுக்கு கல்வியை கொடுத்துவிட்டு அந்த கல்வியின் படி அமல் செய்யாதவர்கள் உதாரணம்)(2) சூரத்துல் ஜும்மாவிலே, புத்தகங்களை சுமந்து செல்லக்கூடிய கழுதைகளை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான்.
 
அதுபோன்றுதான் இமாம் கஸ்ஸாலி சொல்கிறார்கள். நானும் அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் என்று கூறிவிட்டு ஊசியை ஒரு உதாரணமாகச் சொல்கிறார்கள்.இந்த ஊசி என்ன செய்கிறது மக்களுக்கு எல்லாம் சட்டை தைத்துக் கொடுத்து அவர்களது அவ்ரத்தை மறைகிறது. ஆனால் இந்த ஊசியோ ஆடை இல்லாமல் இருக்கிறது. 
 
அது போன்று தான் மக்களுக்கு எல்லாம் இல்லை கொடுத்து மக்கள் தொழுகிறார்கள் தொழுகையை பேணுகிறார்கள் ஹலால் ஹராமை பேணுகிறார்கள் ஆனால் அவர்களுக்கு கொடுத்த இந்த மனிதரோ அமல் இல்லாமல் இருக்கிறார்.
 
என்றால், இந்த ஒரு ஊசியைப் போல மக்களுக்கு ஆடைகளைத் தைத்துக் கொடுத்து விட்டு தான் ஆடை இல்லாமல் இருக்கக்கூடிய அந்த ஊசியை போல என்று மிகவும் ஒரு பொருத்தமான உதாரணத்தை இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் கூறுவதை நாம் பார்க்கிறோம்.
 
சகோதரர்களே ஆகவே சரியான இல்மு அவசியம். அந்த சரியான அமலோடு சேர்ந்து இருக்க வேண்டும். என்பதும் ரொம்ப முக்கியம். இங்கே ஒரு ஹதீஸையும் நாம் பார்க்கிறோம்.
 
كمثل الغيث الكثير أصاب أرضا، فكان منها نقية، قبلت الماء، فأنبتت الكلأ والعشب الكثير 
 
)ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய ஒரு முக்கியமான ஒரு ஹதீஸ். ஸஹீஹ் முஸ்லிமிலே பதிவான ஹதீஸ். அதுபோல ஸஹீஹுல் புகாரி நீண்ட ஹதீஸ். அந்த ஹதீஸில் ஏ இல்மை கற்றுக்கொண்டு இல்மின் படி அமல் செய்யக் கூடிய அந்த மூஃமின்களுக்கு அந்த ஆலிம்களுக்கு ரஸூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன உதாரணம் சொன்னார்கள் என்றால். சொல்கிறார்கள்.(
 
ஒரு பெரிய மழை பூமியிலே பெய்யும் போது அந்த பூமியில் இருக்கக்கூடிய நல்ல மிருதுவான பூமி அந்த தண்ணீரை உறிஞ்சிக் கொள்கிறது. பிறகு அது செடிகொடிகளை மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்தரக்கூடிய புற்பூண்டுகளை முளைக்க வைக்கிறது. இதை ரஸூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உதாரணமாக சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2282 குறிப்பு(1)
 
யார் ரசூலுல்லாஹ் உடைய இல்மை எடுத்துக்கொண்டு அதன்படி தானும் அமல் செய்து பிற மக்களுக்கும் அந்தக் கல்வியை எடுத்து சொல்கிறார்களோ அவர்களுக்கு. ஆகவே. நாம் தலைப்பிற்கு இன்னும் உள்ளே செல்ல வேண்டி இருக்கிறது. அதற்கு முன்பாக இந்த விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.
 
இல்ம் என்பது அமலோடு சேர்ந்து இருக்க வேண்டும். அமல் என்பது இல்மோடு சேர்ந்து இருக்க வேண்டும். இல்மும் அமலும் உள்ளவர்தான் இல்முன் அமலோடு சேர்ந்து தாவா பணி செய்பவர் தான். உண்மையான தாயியாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பக்கூடிய தாயியாக அவர்கள் நேசிக்கக் கூடிய தாயியாக அவருடைய மார்க்கத்திற்கு உண்மையான தாவாவை செய்யக்கூடிய தாயியாக இருப்பார்.
 
என்பதை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அலி ரழியல்லாஹு அன்ஹு அவருடைய ஒரு கூற்றை நாம் பார்த்து சொல்வோம் அலலோடு சேர்ந்து இருக்க வேண்டும். என்பதற்கு ஆதாரமாக நாம் இதை இங்கே பதிவு செய்கிறோம். அலி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.
 
القلوب أوعية، وخيرها أوعاها
 
கல்புகள் இருக்கின்றனவே பாத்திரங்கள் கல்புகள், உள்ளங்கள், நெஞ்சங்கள், பாத்திரங்களாக இருக்கின்றன. சிறந்த கல்வி எது? எந்த கல்பு குர்ஆன் சுன்னாவை இல்மை பதிய வைத்துக் கொள்கிறதோ, உள்வாங்கி கொள்கிறதோ, அது தான் சிறந்த கல்பு என்று சொன்னார்கள். அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லக்கூடிய சொல்லின் உடைய விளக்கம் என்ன?
 
குர்ஆன் சுன்னாவை நாம் படிக்கும்போது உணர வேண்டும். இந்த இல்ம் எனக்கு உள்ளத்திலே என்ன மாற்றத்தை கொடுக்கிறது. ஒரு அமலை படிக்கிறோம் என்றால் அந்த அமல் என்னிடத்திலே வருகிறதா?
 
பாவத்தைப் பற்றிய ஒரு எச்சரிக்கை படிக்கிறோம் என்றால் அந்தப் பாவத்தை விட்டு நான் எவ்வளவு தூரமாக இருக்கிறேன் இப்படிப்பட்ட ஒரு சுயபரிசோதனையோடு கூடிய இல்முதான் உள்ளம் உள்வாங்கிய இல்ம் என்று சொல்லப்படும். ஆகவே தொடர்ந்து அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
 
الناس ثلاثة: فعالم ربـّاني، ومتعلـّم على سبيل نجاة، وهمج رعاع أتباع كلّ ناعق، يميلون مع كلّ ريح، لم يستضيؤوا بنور العلم، ولم يلجؤوا إلى ركن وثيق
 
மக்கள் மூன்று வகையாக இருக்கிறார்கள். ஒருவர் ரப்பு ஏற்றுக்கொண்ட ரப்புக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஆலிம். (ஆலிமுன் ரப்பானியுன்) நல்லா கவனியுங்க. ரப்பு ஏற்றுக்கொண்ட ஆலிம். இவரும் ரப்பை ஏற்றுக் கொண்டார். ரப்பும் இவரை ஏற்றுக் கொண்டான். இவர் ரப்புகாகவே ஆகிவிட்டார்.
 
ரப்புடைய பொருத்தத்திற்காகவே ஆகிவிட்டார். ரப்புடைய பொறுத்ததிற்காகவே வாழ்வது. கட்டளைக்காகவே வாழ்வது. என்று அல்லாஹ்விடத்தில் தன்னை ஒப்படைத்து விட்டார். அவருடைய உள்ளத்தில் ரப்பை தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ்வுடைய பொறுத்ததை தவிர யாருமில்லை. 
 
ரப்பு விரும்பக்கூடிய விஷயங்கள் உலகமோ உலக வஸ்துக்களோ ஆடம்பரமோ இந்த அற்ப இன்பங்களோ அதைப் பற்றிய எந்தவிதமான ஒரு ஊசலாட்டங்கள் இல்லாமல் ரப்புக்காக வேண்டி முழுமையாக தன்னை ஆக்கிக் கொண்டவர்கள்.
 
உலமா ரப்பானியுன் குர்ஆனிலே அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் இந்த வார்த்தை. ஆலிமுன் ரப்பானியுன். யார் அவர்? அல்லாஹ் விரும்புவதை அப்படியே செயல்படுத்த கூடியவர். அல்லாஹ் விரும்புவது என்று நாம் எப்படி தெரிந்து கொள்வது?
 
இது குர்ஆனில் சொல்லப்பட்டு இருக்கிறது. இது ஹதீஸில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகவே குர்ஆனையும் சுன்னாவையும் எடுத்து அப்படியே அமல் செய்யக் கூடியவர். இரண்டாவது நபர் சொன்னார்கள். இரண்டாவது நபர் யார் என்றால்?
 
அவர் மார்க்க இல்மை தேடுகிறார். மார்க்க இல்மை கற்றுக் கொள்கிறார் வழிகேட்டிலிருந்து அழிவில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இப்படியாக பாதுகாப்பு தேடி இல்ம் கற்கக்கூடிய இரண்டாவது நபர். மூன்றாவது நபர். மூன்றாவது கூட்டம் யாரென்றால்,
 
இவர்கள் சாதாரண பாமரர்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கக்கூடிய அந்த மக்கள் கூட்டம். யாரெல்லாம் ஊளை இடுக்கிறார்களோ, அந்த ஊளையிட கூடியவர்களுக்கு பின்னால் கூட்டம் சேர கூடியவர்கள். காற்று எந்தப்பக்கம் வீசுகிறதோ அந்தப் பக்கம் சாய்ந்து விடக் கூடியவர்கள்.
 
கல்வியின் உடைய ஒளியைக் கொண்டு அவர்கள் வெளிச்சம் பெறவில்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக. மூன்றாவது கூட்டம் ரொம்ப டேஞ்சரான கூட்டம் என்னுடைய ஆசிரியர் ஒருத்தனை ஆரம்பத்தில் சொன்னது ஞாபகம் வருது. (இந்த இல்மு இல்லேன்னா என்ன பிரச்சனை வரும்) 
 
சில உதாரணங்களை சொன்னார்கள் அவங்க வயதிலே ரொம்ப மூத்தவர். அவருடைய காலத்தில் சில உதாரணங்களை நமக்கு எடுத்துச் சொன்னாங்க. உங்களுக்கு தெரியும்
 
ஷஷ அதாவது முஸ்லிம் என்ற பெயரிலே அஹ்மதியா ஜமாஅத் என்று ஒரு கூட்டம் இருக்கிறாங்க. அஹ்மதியா ஜமாஅத் அவங்க அவர்களுக்கு வைத்துக்கொண்ட ஒரு பெயர் ஆகும். அஹ்மதியா ஜமாத் முஸ்லிம் ஆகிய நாம் அவங்களுக்கு சொல்லிய பேரு காதியானி ஜமாத் என்று சொல்லி. 
 
யார் இவங்க? குலாம் அஹமது என்று பஞ்சம் உள்ள காதியான் என்ற ஊரில் பிறந்து கொஞ்சம் நஞ்சம் அப்படியே ஃபாரிசி உருதுலேயும் கல்வி படித்துவிட்டு, பிறகு ஆங்கிலேயர்கள் உடைய ஒரு தூண்டுதல்களில் வழிகேட்டிலே சிக்கிக்கொண்டு முஸ்லிம்களை வழிகெடுத்ந ஒரு வழிகேடர்.
 
அவருடைய வழிகேடு என்ன? தன்னை நபி என்று சொன்னார். இந்த மாதிரி முப்பத்தி நான்கு விதமான வழி கேடுகளை அவர் உளறி இருக்கிறார். ஷேக் உஸ்தாத் என்ன சொல்ல வந்தாங்க. இப்போ இந்த மாதிரி தன்னை நபி என்றோ அல்லது தான்தான் மகதி என்றோ அல்லது தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 
உடைய நிழல் என்றோ நானும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு ரஸூல். எனக்கும் மார்க்கம் இருக்கிறது. எனக்கும் ஆயத் இருக்கிறது. என்று இந்த மனிதர் சொல்லும் பொழுது முஸ்லிம் உம்மத் இடத்திலே இல்மு சரியாக இருந்திருக்க வேண்டுமே ஆனால், இவருடைய பிரச்சனை அன்றே முடிந்திருக்கும்.
 
ஆனால் இல்மு இல்லாத காரணத்தினால் இவன் பின்னால் இவனுடைய உலைகளின் பின்னால் மக்கள் ஓட ஆரம்பித்து இன்று அவர்கள் பல நாடுகளிலே அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஜமாத்தாக உருவாகி இருக்கின்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. என்றால் இதற்கு காரணம் முஸ்லிம்கள் இடத்திலே இருந்த அறியாமை என்று சொன்னார்கள். ஓரளவுக்கு புரிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
 
இந்தக் காதியானி கூட்டம் உருவானதற்கு உண்டான அடிப்படை காரணம் என்ன? முஸ்லிம்கள் இடத்திலே இருந்த அறியாமை ஜஹல்.இதைத்தான். அலி ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள். யார் உலைவிட்டாலும் அதன் பின்னால் அவர்கள் சென்று விடுவார்கள்.
 
காற்றில் எந்த பக்கம் வீசுகிறதோ அந்தப் பக்கம் சாய்ந்து விடுவார்கள். என்று அதேபோல உஸ்தாது இன்னொரு உதாரணம் சொல்லி காட்டினாங்க‌. அதாவது சில சகாப்தம்களுக்கு முன்னாடி மௌலானா அபுலாலா மவ்ஜீது என்ற சிந்தனையாளர் இருந்தார். 
 
மார்க்கக் கல்வியை கொஞ்சம் படித்தார். பிறகு மேற்கத்திய ஆங்கிலக் கல்வியை கொஞ்சம் படித்தார். இப்படியாக இரண்டு கல்வியையும் படித்து அவர் ஒரு ஆய்வுகளை செய்ய ஆரம்பித்தார். அந்த ஆய்வுகளிலே நிறைய விஷயங்கள் ஒன்று இரண்டு அல்ல நிறைய விஷயங்கள்.
 
குர்ஆன் ஹதீஸை பின்னால் வைத்து விட்டு தன்னுடைய மண்டையில் உள்ள புத்தியை முன்னாடி வைக்க ஆரம்பித்தார். நல்லா கவனியுங்க. தாயிகள் குர்ஆன் ஹதீஸை முன்னாடி வைத்துவிட்டு புத்தியை மண்டையில் உள்ள புத்தியை அதற்குப்பின்னால் வைத்தால் குர்ஆன் ஹதீஸ் பின்னாடி போ என்று சொன்னால். இது கரெக்டா போய்க்கிட்டு இருக்கும். ஏனென்றால் குர்ஆன் ஹதீஸ் என்பது கோடு போட்ட ஒரு பாதை அதற்குள் கரெக்டாக போகும்.
 
அப்படியில்லாமல் இந்த புத்தியை முன்னாடி வைத்துவிட்டு குர்ஆன் ஹதீஸ் இரண்டாவதா பின்னாடியா வைத்து விட்டால் இந்த புத்தி எப்படினா பயிற்றுவிக்கப்பட பயிற்சி கொடுக்கப் படாத அதுபோன்று அந்தக் குதிரைக்கு மாற்று வாங்க பாருங்க அந்த கடிவாளம்.
 
இரண்டு பக்கமும் கரெக்டாக போவதற்கு அது போடப்படாத ஒரு குதிரையைப் போல தலைதெறிக்க ஓடும் எங்கே வேணுனாலும் ஓடும். கடிவாளமும் இல்லை அதுவும் இல்லை. என்ன செய்யும். எங்கே வேண்டுமானாலும் மனிதனை இழுத்து விட்டு போயி கவுத்திடும் கடைசியிலே அந்த மாதிரிதான் அறிவோம் இப்போ இவரும் அதைத்தான் செய்தார் அறிவை முன்னாடி வைத்தார். குர்ஆன் ஹதீஸை பின்னாடி வைத்தார். 
 
எந்த அளவுக்கு புத்தி இவருக்கு தடுமாறியது என்றால். ஒரு ஹதீஸை முகத்திஸ்கள் பலவீனம் என்று சொன்னாலும் அந்த ஹதீஸ் உடைய கருத்து அறிவு சரின்னு சொன்னா அந்த ஹதீஸை நாம் ஏற்றுக்கலாம் என்றார். ஒரு ஹதீஸை முகத்திஸ் ஸஹீ என்று சொன்னாலும் அறிவு அந்த ஹதீஸின் உடைய கருத்து தவறு என்று சொன்னாலும் அந்த ஹதீஸை நாம் ஒதுக்கி விடலாம் என்று சொன்னார்.
 
இது ஒரு உதாரணம் உங்களுக்கு சொல்றேன். அல்லாஹ் பாதுகாக்கணும். இப்போ இவர் உளரும் பொழுது மக்களிடத்திலே இல்மு இருந்து இருந்தால் இவரை அடையாளம் கண்டு இருப்பாங்க இவரை புரிந்து இருப்பாங்க ஆனால் இல்ம் இல்லை. பேச்சிலே கவர்ச்சி இருந்தது.
 
1000 கணக்கான பேர் இவருடைய பயானுக்கு வருவாங்க இவர் தாபா கொடுத்த 100 கணக்கான பேர் இஸ்லாமை ஏற்றுக் கொள்வார்கள். உடனே மக்கள் இவரை ஒரு இமாம் ஆக்கிவிட்டார்கள். அவர் பெயரில் ஒரு ஜமாத்தை உருவாக்கி விட்டார்கள். அந்த ஜமாத்துக்கு அவர் ஒரு இமாம் இன்னும் சொல்லப்போனால் அந்த ஜமாத்துக்கு அவர் ஒரு ரஸூல் மாதிரி அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
அங்கே அந்த ஜமாத்தில் போனீங்கன்னா. கால ரஸூலுல்லாஹ் அப்படி சொன்னால் அப்படியே அமைதியா இருப்பாங்க. அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னாங்க, உமர் சொன்னாங்க ரழியல்லாஹு அன்ஹு சொன்னாலும் அப்படியே அமைதியாக இருப்பாங்க. ஆனா மௌலானா அபுல் லாலா மொழுதி சொன்னார்கள்.
 
அப்படின்னு சொல்லிட்டு அப்படியே பரவசம் அடைந்து விடுவார்கள் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சஹாபாக்கள் உடைய பெயரை சொல்லும் போது கூட (ரலி )அலைஹிம் என்று மனசார சொல்ல மாட்டார்கள். ஆனால் அவர் பெயரை சொல்லும் பொழுது அப்படி பக்தி பரவசத்தோடு அப்படி புனிதத்தோடு அந்த அளவு அவர்கள் அப்படியே உணர்ச்சிவசப்பட்டு சொல்வாங்க தாஃபியீன்கள் லே வாழ்ந்த பல இமாம்கள் உடைய பெயரை சொல்லும் பொழுதெல்லாம் அவர்களுக்கு உணர்வு வராது அந்த ஒரு ஈமானுடைய ஜூஸ் வராது ஆனா அவளால மௌலூது உடைய சிந்தனையிலேயே,
 
உருவான அவருடைய புத்தகங்களில் பால் குடித்த அவங்களுடைய இயக்க ஆலிம்கள் உடைய பெயரை சொல்லி விட்டால் அப்பொழுது அவர்களுக்கு வரக்கூடிய பக்தி பரவசம் நம்பிக்கை எவ்வளவு பெரிய அழிவை எங்க ஆலிம்கள் சொல்லிட்டாங்க என்று சொல்லி அப்படியே சிலாகித்து அப்படியே போயிடுவாங்க அதேபோலதான் தப்லீக் ஜமாத்தை சொல்லலாம்,
 
இவர்களும் அப்படித்தான் இப்போ இந்த கூட்டம் உருவானபோது மக்களிடத்திலே சரியான இல் இருந்து இருந்தால் புரிந்த இருப்பாங்க இது வழிகேடு இவர்களிடம் ஒரு ஆணும் இல்லை ஹதீசும் இல்லை தொழுகையின் பக்கம் அழைக்கிறோம் என்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு உம்மதிலே சூஃபி சரிதாவை தரீகா சிந்தனைகளை புகுத்த கூடியவர்கள்.
 
என்று அடையாளம் கண்டுபிடித்து இருப்பாங்க ஒருத்தர் மார்க்கத்தை சொல்ல வராரு மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்கு போவோம் வாங்க என்று சொல்லும்போது அதற்கு உங்களிடம் என்ன சரக்கு இருக்கு அப்படின்னு கேட்கணுமா இல்லையா இல்லை குர்ஆன் தர்ஜுமா இல்லை இருக்கிற புத்தகங்களைப் பார்த்தால் கொஞ்சம் பெயருக்கு 4004 சஹீஹான ஹதீஸ் மிச்சம் இருப்பது எல்லாம் குப்பை ஆதாரமற்ற அடிப்படை இல்லாத அஹ்லுஸ்ஸுன்னா உடைய அகீதாவிற்கு மாற்றமான கதைகள் பயான் செய்பவருக்காவது இல்மு இருக்கா. ஆயிரத்தில் ஒருத்தர் ஆலிமாவாக இருப்பார். அவரும் அந்த ஜாஹில்ல் ஓட சேர்ந்து சேர்ந்து அவரும் ஜாஹில் ஆகி போய் இருப்பார்.
 
இந்த தமிழிலே பழமொழி சொல்வாங்க. கொஞ்சம் அசிங்கமா இருக்கும். நான் சொல்ல விரும்பவில்லை. அதோட எதுவும் சேர்ந்துசுனா எதையும் திங்குமா. அந்த மாதிரி இந்த ஆளின் ஜாஹீர் ஓட சேர்ந்து சேர்ந்து குர்ஆன் ஹதீஸை விட்டுவிட்டு கதையும் கப்ஸாவையும் பேசி மக்களுக்கு பரவசத்தை உண்டு பண்ணிக் கொண்டு இருப்பார். இது ஒரு மூன்றாவது கூட்டம்.
 
வழிகெட்ட கூட்டத்தினர் உடைய உதாரணம் சொல்றேன். இந்த மூன்றாவது கூட்டங்களும் நாங்களும் தாவா செய்கிறோம் என்று சொல்றாங்க. இன்றைக்கு இந்தியாவில் காஜி அணி ஜமாத் தாவா பண்ணி கிட்டு இருக்கு ஒன்றுமில்லை. இந்த புக் ஃபேர் மெட்ராஸ் உடைய புக் ஃபேருக்கு போனீங்கன்னா. அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸ் இருக்கிறார்.
 
ஷேக் அப்துல்லாஹ் ஃபிர்தௌஸ் நான் சொல்றது சரியா இல்லையா என்று சொல்லுங்க. மெட்ராஸ்லே புக் ஸ்டால் புக் ஃபேர் காதியாணிகள் உடைய புக் ஸ்டால் எவ்வளவு பெருசா இருக்கும். எவ்வளவு கவர்ச்சியாய் இருக்கும்.
 
சரி கவனிங்க. அவர்களும் ஃப்ரீ கொடுக்கிறார்கள். ஃப்ரீ புத்தகங்கள் கொடுக்கிறார்கள். தாவா பண்றாங்க. அதற்குப் பிறகு இப்போ மூன்றாவது ஒரு குரூப் ஒரு குரூப் சொன்னா தப்லீக் ஜமாத். அவர்களும் அப்படியே வைத்துக் கொள்வோம்.
 
இன்னொரு குரூப் இந்த அபுலாலா மௌலூது கிட்ட பால் குடிச்சு அவரைவிட நானும் ஒரு பெரிய இமாம் எனக்கு அதைவிட பெரிய அறிவு இருக்குன்னு சொல்லி உருவானவர் தான் இந்த வஹீதுதின்கான இந்த வஹீதுதின்கான கிட்டே அபுலாலா மௌலுதும் இருப்பார்.
 
தப்லீக் ஜமாத் உடைய இலியாஸ் ஸாஹிபும் இருப்பார். பரேலவிகளுடைய பரேலவியும் இருப்பாரு. அதேபோல இந்து சாமியார்கள் உடைய சாமியாரும் இவருக்கு உள்ளே இருப்பார். இந்த எல்லாம் சேர்ந்து ஒரு கலவை தான் வஹீதுதின்கான். என்ற ஒரு கலவை இப்போது என்ன ஆனது. 
 
அவருடைய (ரிசாலப்) பத்திரிக்கையை படித்துவிட்டு அவருடைய ஆர்ட்டிகல்ஸ் கவர்ச்சியான ஆர்ட்டிகல்ஸ் அதேபோல 1,2 புத்தகம் எழுதி இருப்பாங்க. அதை போட்டுபாங்க. உலகத்தில் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல லட்சக்கணக்கான பிரதிகள் விநியோகம் செய்யப்பட்ட பெரிய புத்தகம் என்று இருந்துட்டு போகுது நமக்கு என்ன இருக்கு குர்ஆன் ஹதீஸை விட பெருசா? இமாம் புகாரியை விட பெருசா ஆயிடுமா?
 
இமாம் முஸ்லிம் உடைய ஸஹீ முஸ்லிமை விட பெருசா ஆயிடுமா? இமாம் திர்மதி உடைய சுரனு திர்மதியை விட பெருசா ஆயிடுமா? இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவருடைய பெருசு ஆயிடுமா? அவர்களுடைய மூல நூல்களை விடவா இது பெருசு மூல நூல்களை விடவா இதிலே அறிவு இருக்கு சிந்திக்க வேண்டாம்.
 
இல்மு இல்லை என்ன ஆச்சு அதை நல்லா புரிஞ்சு கொள்ளுங்க. நல்லா கவனிங்க திரும்ப சொல்றேன். நல்லா கவனிங்க. ஏன் சொன்னா. இது பொதுமக்கள் இருக்காங்க பாருங்க. இவங்க பின்னாடி போலாமா வேண்டாமா. போலாமா வேண்டாமா. என அப்படியே பார்த்துகிட்டே இருப்பாங்க. 23 ஆலிம்கள் அவங்களோட கூட சேர்ந்து விடுவாங்க பார்த்தீங்களா?
 
ஜாஹில் ஆலிம்கள் ஆலிமான ஜாஹில் ஏன் ?அப்படினா அக்கீதா இருக்கிறது. மன்ஹஜ் தெரியாது. நேர்வழி என்று எதை வைத்து முடிவு செய்வது. ஒரு மனிதனுடைய காரசாரமான பேச்சை வைத்தா? ஒரு மனிதனுடைய அலங்காரமான பேச்சை வைத்தா? ஒரு மனிதனுடைய பேச்சை அதிகமான மக்கள் கேட்கிறார்கள் என்பதை வைத்தா?
 
ஒரு மனிதரை அதிகமான மக்கள் ஃபாலோ பண்றார்கள் என்பதை வைத்தா? என்றால் கண்டிப்பாக கிடையாது. ஏன் அப்படி பார்த்தீங்கன்னா ஹதீஸிலே ரஸூல் (ஸல்) சொல்றாங்க.மறுமையிலே சில நபிமார்கள் வருவாங்க. அவர்களுக்கு ஒரே ஒரு ஃபாலோவர் தான் இருப்பாரு.
 
 சில நபிமார்கள் இரண்டு பேரு 3 பேரு சில நபிமார்களுக்கு பத்தை விட குறைவாக சில நபிமார்களுக்கு ஃபாலோவர்ஸே இருக்க மாட்டாங்க. ரஸூல் (ஸல்) 13 வருடம் மக்காவில் தாவா செய்து. மக்காவிலே 13 வருஷம் நபி தாவா செய்து. 100 அல்லது 100 விட கொஞ்சம் கூட அவ்வளவு தான்.
 
ஆனால் இன்றைக்கு ஒருத்தர் தாவா ஃபீல்டுக்கு வந்த ஆறே மாசத்துல அவர் யூடியூப் ஆரம்பிச்சு 10 ஆயிரம் 20 ஆயிரம் லட்சம் ஃபாலோவர்ஸ் இப்போ இடையில ஒரு கூட்டம். சூப்பர் முஸ்லிம் அப்படின்னு ஒரு கூட்டம். அதுல பாத்தா அதுல ஆயிரக்கணக்கான மக்கள் சப்ஸ்கிரைப்பர் அவருடைய பேச்சுக்கு பின்னாடி லட்சகணக்கான மக்கள்.
 
ஆஹா என்ன கருத்தை சொல்கிறார். என்று சொல்லி முழுக்க முழுக்க வழிகேடன். அவனுடைய பேச்சு ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் முட்டாள்தனம் ஜஹாலத் புரியமாட்டேங்குது மக்களுக்கு அதோட சேர்ந்து இங்கே புதுசா கல்வி படிச்சிட்டு வருவாங்க முதல் மதர்ஸாலே அவங்களுக்கு எப்படி சொன்னா அவங்களுக்கு ஒரு பிளாட்பாரம் வேண்டும் பயான் செய்றதுக்கு அவர்களை பெருசா கொண்டுவந்து நிறுத்துவதற்கு அவங்களுக்கு ஒரு மைதானம் தேவை.
 
அப்போ இந்த மாதிரி வழிகெட்டவர்கள் எங்ககிட்ட வாங்க நாங்க உங்களுக்கு பேசுவதற்கு மைதானம் கொடுக்கிறோம். வேலை கொடுக்கிறோம். உங்களுடைய பேச்சை கேட்க கூடிய மக்களே நாங்கள் கொண்டு வரோம். வாங்க. சொன்னவுடன் அவ்வளவுதான் அவங்களும். முடிஞ்சு போச்சு.
 
சொர்க்கபுரியை பார்த்தமாதிரி சேர்ந்து கொள்ள வேண்டியது. அப்போ ஒரு தலைமை வழிகேடன் நல்லா கேளுங்க ஒரு தலைமை வழிகேடன் அவனுக்கு பின்னாடி, வாலு வழிகேடர்கள் இப்படி வழிகேடர்கள் உடைய கூட்டம் சேர்ந்து மொத்தமா சேர்ந்து ஆரம்பித்தவுடன் பொதுமக்களுக்கு என்ன ஆஹா, ஆஹா, ஆஹா.
 
அதிலேயும் வந்து கவர்ச்சியாக இருந்தார்கள். இருந்தா இன்னைக்கு மக்களுடன் நிலைமை அப்படித்தான் வித்தியாசமா என்ன புதுசா சொல்றாரு. என்ன வித்தியாசமா சொல்றாரு அப்போ உடனே அவருடைய பின்னாடி கூட்டமா போகிறது. இந்த இடத்திலே இன்னொரு விஷயம் சொல்றேன் இதோ பாருங்க.
 
இஸ்லாம் பழமையான மார்க்கம் இதிலே புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமே கிடையாது. புதுசா சொல்றதா இருந்தா சொந்தமா சரக்கு தான் கொண்டு வரணும். சொந்தமா மண்டையிலிருந்து சைத்தான் உளற மாதிரி உளர்னா தான் புது சரக்கு. குர்ஆன் ஹதீஸ் பழமையானது. அது ஏற்கனவே எழுதப்பட்டது. முடிவு செய்யப்பட்டது.
 
அப்போ இந்த சரியான இல்மு இல்லாத காரணத்தினாலே இப்படிப்பட்ட வழிகேடர்கள் உருவாகி இன்று அவர்கள் எல்லாம் தனி இயக்கங்கள் ஆகவும். பிறகு முஸ்லிம்களிலே அவர்கள் எல்லாம் ஒரு ஜமாஅத். அவங்களுக்கு ஒரு அமீர் அவங்களுக்கு ஒரு ஃபாலோவர்ஸ் அவங்களுக்கு ஒரு கூட்டம் அவங்களுக்கு தனி மஸ்ஜித் என்று ஆகக்கூடிய நிலைமை உருவாகி இருப்பதை பார்க்கிறோம். 
 
வழிகெட்ட கூட்டத்திற்கும், நேர்வழி பெற்றவர்களுக்கும் இடையிலே ஒரு வித்தியாசம் யாருக்காவது ஒரு கேள்வி வரலாம் வரும் அனேகமா, ஆளே ஹதீஸ் கூட அவங்க ஒரு ஜமாத்து தான் சொல்றாங்க அப்படின்னு சொல்லி கேள்வி சரியான கேள்வி என்ன விளக்கம் சரியான கேள்வி எந்த அர்த்தத்தில் சொல்கிறேன் கேள்வி வரலாம் பாமரர்களுக்கு வரலாம் நல்லா கவனிங்க நாம் என்ன கேட்கிறோம்.
 
அஹ்லே ஹதீஸ் வந்து தனி ஜமாஅத். இந்த அஹ்லே ஹதீஸுக்கு இமாம் யாருங்க. அஹ்லே ஹதீஸுக்கு இமாம் யாருங்க. கேட்கிறோம் நாம் தாயிகள் கிட்டே கேட்கிறேன். நபி முஹம்மது (ஸல்) அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு.
 
நம்ம ரஸூலுல்லாஹ் (ஸல்)அவர்களை தவிர யாருமே இமாம் ஆகவில்லை. அதேபோல ஸஹாபாக்களை தவிர வேறு யாரையுமே நாம முன்மாதிரி ஆக்கிக் கொள்ளவில்லை. நமக்கு என்ன வேலை கால ரஸூலுல்லாஹ்வை மக்கள் கிட்ட சொல்லணும். கால அபூபக்கர்,வகால உமரை மக்கள் கிட்ட எடுத்து சொல்லணும். அவ்வளவுதான் வேலை நமக்கு. 
 
இந்த வழிகெட்ட ஜமாத்துகள் இருக்காங்க இல்லையா ஏன் அவங்களே வழிகேடு சொல்றோம்னா. அவர்களிடத்தில் குர்ஆன் ஹதீஸ் எல்லாம் இரண்டாவது. அந்த ஜமாத்தை எஸ்டிபிலைட் பண்ண. ஸ்தாபகர் ஜமாத் உடைய ஸ்தாபகர் அந்த ஸ்தாபகர் உடைய கூற்றுதான் அவங்ககிட்ட மெயினா ஆயிருக்கும். அவர் ஒரு பையிலா போட்டு இருப்பார். அவர் ஒரு அடிப்படை வைத்து இருப்பார்.
 
அவர் புத்தகங்கள் சில எழுதி இருப்பாரு அதையேதான் படிப்பாங்க. தப்லீக் ஜமாத் உடைய எப்படி சொன்னா. நீங்க குர்ஆன் ஹதீஸை கொண்டுபோய்க் கொடுத்தால். புகாரி ஹதீஸை கொண்டுபோய் கொடுத்தால். அவங்க வந்து அப்படியே தூங்கி விழுந்து அப்படியே கொரோனாலே இருந்து விழுந்து எழுந்து வந்த மாதிரி உட்கார்ந்து இருப்பாங்க. கையிலே அமல்களின் சிறப்புகள் கொண்டுபோய் கொடுங்களேன். அவ்வளவுதான் அப்படியே பக்தி பரவசத்தில் துடித்துப் போய் அப்படியே. ஜாஹில். அவங்களுக்கு வந்துவிடும்.
 
அதே போல தான் இந்த இயக்கங்கள் இப்போ நம்மை பொறுத்த வரைக்கும் நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சி எதை கொண்டு ?குர்ஆனை கொண்டு. நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சி எதைக்கொண்டு ?ஸஹிஹுல் புகாரியை கொண்டு. ஸஹீ முஸ்லிமை கொண்டு. ஹதீஸ் கிதாபுகளை கொண்டு. நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிதாபுகளை கொண்டு நம்முடைய உள்ளத்திலே மகிழ்ச்சி.
 
அந்த ஹதீஸுக்கு ஒரு ஆலிம் விளக்கம் எழுதி இருந்தார்னா, ஹதீஸுக்கு விளக்கம் தேவை என்பதற்காக வேண்டிதான், அந்த விளக்கத்தை படிப்போம். அந்த ஆலிம் உடைய விளக்கம் சரியா இருந்தா, இன்ன ஆலிம் இந்த ஹதீசுக்கு இவ்வளவு அழகான விளக்கம் கொடுத்து இருக்காரு. என்று சொல்வோம். அதோடு முடிச்சுப்போமே தவிர அவரை ஸஹாபாக்களுக்கு மேலே கொண்டு வைக்க மாட்டோம்.
 
அவரை ரஸூலுல்லாஹ் விற்கு மேலே கொண்டுபோய் வைக்க மாட்டோம். அவர் ஏதாவது தவறு செய்து இருந்தாலும் இன்ன விஷயத்திலே இன்ன ஆலிமுடைய கூற்று சரியில்லை என்று தெளிவுபட சொல்லிவிடுவோம். இதுதான் அஹ்லுல் ஹதீஸுக்கும், ஜமாத்துல் ஹதீஸுக்கும், ஜமாத்து அஹ்ல ஹதீஸுக்கும், மற்ற குரூப்களுக்கும் இடையில் உண்டான வித்தியாசம்.கைர்.
 
இது ஒரு நீண்ட விளக்கமா உங்களுக்கு போய்விட்டது எதுக்கு என்று சொன்னா ரொம்ப அவசியமான ஒன்று இதில் சொல்ல வேண்டியதா போய் விட்டது. (இந்த சரியான இல்லாத காரணத்தினாலே) மக்கள் இந்த இஸ்லாம் என்கிற பெயரிலேயே வழி கேடுகளை உருவாக்கினார்கள்.
 
இந்த அபுலால மௌலூது ஆரம்பத்திலே ஒரு தாயியாக இருந்தார். அதேபோலதான் குலாம் அஹமது காரியாவும் ஆரம்பத்திலே ஒரு தாயியாக இருந்தார். அதேபோல தான் இந்த சூப்பர் முஸ்லீம் என்று சொல்லக்கூடிய அதனுடைய ஸ்தாபகர் உங்களுக்கு யூட்யூப்ல பேசிப் பாருங்க அவர் ஒரு தாயியா இருந்தவர்.
 
அதே போலதான் இந்த இயக்கங்களே உள்ளவங்க எல்லாம் ஆனா தாயியாய் இருந்து இருந்து அவர்களுடைய பேச்சின் மேலே அவங்களுக்கு ஒரு அபாரமான என்னுடைய பேச்சிலே ஒரு சக்தி இருக்கு. அப்படி, என்கிற அந்த ஒரு எண்ணம் வந்துவிட்டது. என்னுடைய பேச்சை இத்தனை பேர் கேட்கிறார்கள். அப்படிங்கிற மாதிரியான ஒரு பெருமை வந்துவிட்டது. அப்போ சைத்தான் அவர்களிடத்தில் விளையாட ஆரம்பிக்கிறான்.
 
சரியான இல்மு இருக்குமேயானால் அங்கே அல்லாஹ்வுடைய பயம் அங்கே கூட வந்து இருக்கும். ஆஹா அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே நம்ப வந்து தவறானது சொல்லிவிடக்கூடாது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ்விற்கு விருப்பம் இல்லாதது சொல்லிவிடக்கூடாது.
 
அப்படி என்கிற பயம் வந்திருக்கும். அப்போதான் ஒரு வார்த்தையை சொன்னா அது ஸஹாபாக்கள் அந்த மாதிரி சொல்லி இருக்காங்களா. தாஃபியீன்கள் அந்த மாதிரி சொல்லி இருக்காங்களா. அப்படி என்று அலசி ஆராய்ந்து இருப்பார்கள். அதற்கு மாற்றமானதை நான் சொல்லி உம்மத்தை வழி கெடுத்து விடக்கூடாது என்கிற பயம் அவர்களிடத்தில் இருந்திருக்கும். நல்லா கவனிங்க.
 
எப்போ சரியான இல்ம் ஒரு தாயி இடத்திலே இல்லையோ, நல்லா கவனிங்க. நான் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நீங்க வாழ்க்கையிலே இதை எப்போ எப்போ எல்லாம் இந்த வழி கேடுகளை நீங்க உங்களுக்கு முன்னாடி பார்ப்பீங்களோ, அப்போ இந்த வார்த்தையைக் கொண்டு வந்து நிறுத்தி பாருங்க. உண்மையாய் இருக்கும்.
 
உண்மையான இல்மு என்பது. அல்லாஹ்வுடைய பயத்தோடு சேர்ந்து இருந்தா தான் அது உண்மையான இல்ம். அந்த அல்லாஹ்வுடைய பயம் இருக்கும் பொழுது தான் உங்களுக்கு இந்த இல்ம் பலனை கொடுக்கும். அல்லாஹ்வுடைய பயத்தை கொடுக்கக்கூடிய இதுதான் சரியான இல்ம் எப்போ நம்முடைய பேச்சு ரொம்ப சிறப்பான பேச்சு என்று ஒரு மனிதர் பெருமை பேச ஆரம்பிக்கிறாரோ, அல்லாஹ் பாதுகாக்கணும்.
 
அதேபோல என்னுடைய விளக்கத்தை மீறி யாரும் சொல்லமுடியும். நினைக்கிறாரோ, அங்கே அவர் வழிக்கெட ஆரம்பிக்கிறார். அதனாலதான் நம்முடைய ஸலஃபுகள் எப்போ ஒரு விஷயத்தை சொன்னாலும் அல்லாஹ் ஆலிம். நம்முடைய முன்னால் உள்ள உலமாக்கள் முஃப்த்திகளை பாருங்க பத்வா கொடுப்பாங்க.
 
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கடைசில எழுதுவாங்க. அல்லாஹ் மிக அறிந்தவன். உண்மையான விஷயத்தை அல்லாஹ் அறிந்தவன். என்று எழுதுவாங்க. ஏன்னா பயம் அந்த பயம், அந்த பயம். இது எப்போ கிடைக்கும். உங்களுக்கு. அதான் நான் சொல்றேன். சரியான இல்மை படித்தால் மட்டும் தான் கிடைக்கும்.
 
சரியான இல்மு எது? ஸஹாபாக்கள் உடைய இல்மு தாஃபியீன்களுயுடைய இல்ம் எந்த இல்மை அஹ்லுஸ்ஸுன்னா உடைய அகீதா என்று நம்முடைய இமாம் நமக்கு கொடுத்துவிட்டு சென்றார்களோ. அதுதான் சரியான இல்மு. 
 
ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அலைஹி உங்களுக்கு தெரியும். அவர் எப்படிப்பட்டவர் என்று ஏன் இப்போ இந்த வார்த்தையை நான் சொல்வேனா இன்றைக்கு ஒருவர் தாவா ஃபீல்டில் வந்தார் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கனும் என்று ஆர்வம் இருக்குது. ஆனா அதே நேரத்துல இல்மை தேடுவதிலே சோம்பேறியாக இருக்கார். 
 
அவர் என்ன நினைக்கிறார் என்றால். அதான் நமக்கு இந்த சில விஷயங்கள் தெரியுது. சில ஆயத்துக்கள் அர்த்தம் தெரியுது. நம்ம சொன்னா தான் ஒருத்தர் உடனே கேட்டு முஸ்லீம் ஆயிட்டாரே. அப்போ நான் இனி மேல் நான் என்ன படிக்க அப்படி மனநிலைக்கு வந்துவிட்டார். இனி மேலுக்கு நான் படிக்குறதுக்கு என்ன இருக்கு. அப்படிங்கற மாதிரி அல்லாஹ் பாதுகாக்கணும். (அஸ்தஃபிருல்லாஹ் அலீம்) அல்லாஹு அக்பர்.
 
அதாவது ஒருவர் ஒரு ஊர்ல வாழ்ராரு அந்த ஊரிலே எப்படின்னு சொன்னா உதாரணத்திற்கு நம்ம ஊர் மாதிரி டேப் வாட்டர் அல்லது அடிப்பைப்ல தான் தண்ணியே பார்த்து இருக்காரு. குளத்தை பார்த்ததில்லை. ஏரியை பார்த்ததில்லை. கடலையும் பார்த்ததில்லை. அப்ப அந்த மனிதர் கிட்ட சொல்லப்படுவது.
 
குளம் ஒன்று இருக்கிறது. அதிலே பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் இருக்கும். பெருசா இருக்கும் .ஒரே நேரத்தில் 100 கணக்கான பேர் குடிக்கலாம். பெரிய ஏரி இருக்கு லட்சக்கணக்கான பேர் குடிக்கலாம். பெரிய கடல் இருக்கு உலகத்திலே கோடிக்கணக்கான பேர் அதுலே உள்ளே போனால்கூட அந்தக் கடல் வந்து எல்லோரையும் வாங்கிக்கொள்ளும்.
 
அவ்வளவு பெருசு. என்று சொன்னால் அவனுக்கு இதைப்பற்றி கேள்விப்படாத அவன் அறியாதவன் பார்க்காத அவன் என்ன செய்வான். அந்த மாதிரி தான் இன்னைக்கு உள்ள நிலைமை. தன்னிடத்தில் இருக்கக்கூடிய ஒரு அற்பமான ஒரு அளவை வைத்து கொண்டு. இன்று மனிதர்களில் பலர் அதாவது தாயிகள் பலர் கல்வியிலே தான் தன்னிறைவு ஆகி விட்டதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
 
அதற்கு என்ன காரணம். நான் சொல்றேன் நல்லா கவனிங்க. பத்து நிமிடம் அல்லது அரை மணி நேரம் பேச தெரிந்துவிட்டால் தான் ஒரு கம்ப்ளீட் தாயி. அப்படி என்று அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள். தாயிகள். நான் சொல்றது கவனிக்கிறீர்களா. ஒரு ஒரு மணி நேரம் பேச தெரிந்துவிட்டால் போதும்.
 
அல்லது ஒருத்தருக்கு சொல்லி சொல்லி அவர் இவருடைய பேச்சை கேட்டு இஸ்லாமுக்கு வந்துவிட்டார் என்று தெரிந்துவிட்டால் முடிஞ்சு போச்சு. இப்போ இந்த தாயி தாயி என்கிற லெவலுக்கு மேலே போயி ஆலிம் ஆகிவிடுவார். அப்புறம் கொஞ்ச நாளில் இவர் முஃப்தி ஆகிடுவார். அப்புறம் கொஞ்ச நாள்லே இவர் ஒரு இமாம் ஆகிடுவார். (அப்படி அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்) (2) 
 
நான் பேரை சொல்ல விரும்பவில்லை இருக்கிறார்கள். கடைசியில் அவர்களும் ஹலால் ஹராம் பத்வா கொடுப்பார்கள். அவர்களும் ஹதீஸ் வந்து ஸஹீதானா, பலவீனமா என்று பேசுவாங்க. அவர்களும் வந்து உலமாக்கள் உடைய கருத்துகளில் எந்த கருத்து சரியான கருத்து என்று அனலைஸ் பண்ணுவாங்க. அவர்களும் பத்வா கொடுப்பார்கள் எப்படி?
 
லாக்டோன் காலத்திலே மக்கா மதினாவில் நடக்கிற தராவி கொள்கையை வைத்து நம்ம வீட்டில் இருந்து டிவி பார்த்துகிட்டு தராவீஹ் நாமும் தொழலாம் என்று பத்வா கொடுப்பார்கள். கேட்டால், நான் அனலைஸ் பண்ணதிலே இது சரின்னு தெரிஞ்சிடுச்சு சொல்வார்கள். அவர்கள் பின்னாடி போறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கு. இதை ஏன் சொல்ல வரேன் சொன்னா,தாயிகளே, நான் யாரையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. 
 
த ஆப்சென்ட் ஆப் கரெக்ட் நாலேஜ் ஹவ் டேமேஜ் உம்மா. அதுதான் நான் சொல்ல வரேன். சரியான இல்மு இல்லாமை எந்த அளவு உம்மத்தை பாதிக்கிறது. உம்மத்துக்கு எதிரி அளவு அது டேமேஜ் ஆக இருக்கிறது. புரியுதா இல்லையா?
 
ஹஸன் பஸரி ரஹீமஹுல்லாஹ் அலைஹி பாருங்க. அவங்க யாரு என்று சொன்னா. ஹயாத்தாக இருந்து ஸஹாபாக்கள் அவர்களிடம் பத்வா கேட்டு வந்தால், ஹஸன் பஸரி இருக்காரு இல்லே ஊரிலே அவர்கிட்டே பத்வா கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். அல்லாஹு அக்பர்.
 
சஹாபாக்கள் உடைய மாணவர் இவர் ஸஹாபாக்களில் ஹயாத்தாக இருந்த மிச்ச மீதி ஸஹாபாக்கள் கிட்டே மக்கள் போய் பத்வா கேட்டால், ஹஸன் பஸரி ஊரிலே தான இருக்காரு ஹஸன் பஸரி கிட்டே கேட்டுக் கொள்ளுங்கள். என்று சொல்வார்கள். அந்த அளவு இல்ம் உள்ளவர். அவர் சொல்றார்: 
 
قال: لأن أتعلم بابا من العلم فأعلمه مسلما أحب إلي من أن تكون لي الدنيا كلها في سبيل الله تعالى
 
கல்வியில் இருந்து நாம் ஒன்றை கற்றுக் கொள்வது, எனக்கு உலகத்தை விட சிறந்தது எனக்கு ஒரு இல்மை நான் போய் தேடி கற்றுக்கொள்வது இருக்கே எனக்கு துன்யா முழுக்க கிடைப்பதைவிட துன்யாவெல்லாம் நான் சொந்த மாக்கி கொள்வதை விட எனக்கு சிறந்தது. என்று சொன்னார். யோசித்துப் பாருங்கள்.
 
ஏன்னா கல்வியில் உடைய அருமையை புரிஞ்சாங்க. கல்வி என்பது எவ்வளவு விசாலமானது. எவ்வளவு இன்னும் நாம் கற்க வேண்டியது இருக்கிறது. என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அதனாலதான் அவங்க ஆலிம் என்று போற்றப்பட்டார்கள். அதை போல் இமாம் அகமத் இப்னு ஹம்பல் ரஹீமஹுல்லாஹ் அவங்க சொல்றாங்க:
 
மக்களுக்கு கல்வியின் உடைய தேவை எப்படி என்றால், உணவு அது போன்று குடிநீர். உணவு குடிநீர் உடைய தேவையை விட மக்களுக்கு கல்வியின் உடைய தேவை அதிகம். காரணம் ஒரு நாளைக்கு நமக்கு உணவு எத்தனை முறை தேவை. ஒரு முறையோ இரண்டு முறையோ மூன்று முறையோ. தண்ணீர் எத்தனை முறை தேவை.
 
ஐந்து முறை பத்து முறை. ஆனால் நமக்கு மூச்சு விடுவதற்கும் மூச்சு எடுப்பதற்கும் இப்படி ஒவ்வொரு நொடியிலும் நமக்கு சரியான இல்ம் உடைய தேவை இருக்கிறது. இல்ம் உடைய அவசியம் இருக்கிறது. ஏன் அல்லாஹ்விற்கு பொருத்தமானதை செய்யணும். அல்லாஹ்விற்கு வெறுப்பானதை விடனும். அப்போ இல்முடைய தேவை ஒவ்வொரு மூச்சிலும் இருக்கும்.
 
உணவு உடைய தேவை ஒரு நாளைக்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ மூன்று தடவையோ. தண்ணீர் உடைய தேவை ஒரு நாளைக்கு ஐந்து தடவையும் 10 தடவையும். அப்போது இல்முடைய தேவை எவ்வளவு மிக ஆழமானது. என்பதை அகமது இப்னு ஹம்பல் ரஹ்மஹுல்லாஹ் அலைஹி அவர்கள் சொல்கிறார்கள்.
 
அதேபோல அகமது இப்னுல் ஹிவாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்.ஒருத்தர் அமல் செய்றாரு. ஆனால் சுன்னத் உடைய வழிகாட்டுதல் இல்லை. அப்போ அவருடைய இல்ம் இருக்கிறதே, பாதில் வீணானது. என்று அவர் சொல்கிறார்.
 
ஏன் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: நான் கட்டளையிடாத அமலை யார் செய்வாரோ அந்த அமல் வீணானது. ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று சொன்னார்கள். அப்போ இந்த இல்மு நமக்கு ரொம்ப முக்கியம். ஒரு ஸஹீஹான ஹதீஸ்லே, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்வதைப் பார்க்கிறோம். மறுமை உடைய அடையாளங்களில் ஒன்று. கல்வி உயர்த்தப்பட்டு விடும்.
 
قال رسول الله صلى الله عليه وسلم: من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر و يظهر الزنا  
 
அறியாமை ஜாஹில், ஜஹலத், மடமை அறியாமை உலகத்திலே தங்கிவிடும். மக்கள் மது அருந்துவார்கள். விபச்சாரம் பெருகிவிடும். என்று அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 78
 
ஆகவே சரியான இல்மு என்பது நமக்கு ஒரு முக்கியமான ஒன்று மற்றும் இப்னுல் கைய்யும் ரஹிமஹுல்லாஹ் அலைஹி சொல்கிறார்கள்:
 
إنَّ بقاء الدِّين والدنيا في بقاء العلم
 
இந்த துன்யாவும் தீனும் பாக்கியா இருக்கவேண்டுமென்றால், அதுக்கு இல்மு பாக்கியா இருக்கணும். (இல்மு இல்லையென்றால் துன்யாவும் சீரழிஞ்சிடும், தீனும் சீரழிஞ்சிடும்.) அதுபோல் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பாருங்க.
 
இந்த கல்வியின் முக்கியத்துவம் குறிப்பாக குர்ஆன் ஹதீஸ் உடைய முக்கியத்துவம் எந்த அளவுக்கு நமக்கு அடிப்படை. என்பதை நம்முடைய குலா ஃபக்கள் புரிந்து வைத்திருந்தார்கள். உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ் அலைஹி தங்களுடைய காலத்தினுடைய ஆலிம்களை தாயிகளை கூப்பிட்டு அவர்கள் சொன்னார்கள்.
 
انظر ما كان من حديث رسول الله صلى الله عليه وسلم فاكتبه، فإني خفت دروس العلم وذهاب العلماء ولا تقبل إلا حديث النبي صلى الله عليه وسلم 
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹதீஸ்கள் எல்லாம் தேடித்தேடி நீங்க அதை எல்லாம் எழுதுங்கள். கல்வி அழிந்து விடுவதையும் உலமாக்கள் இறந்து போய் விடுவதையும் நான் பயப்படுகிறேன் என்று சொன்னார்கள்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஸஹீஹான ஹதீஸ் தானா என்று கேட்டு அதை நீங்கள் பதிய வைத்துக்கொள்ளுங்கள் புரியுதா இல்லையா.
 
அப்போ இந்த அளவுக்கு நம்முடைய ஸலஃப் ஸாலிஹீன்கள் இல்முக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். கல்விக்கு அந்த அளவுக்கு அவங்க அந்தக் கல்வியின் உடைய அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னாங்க இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.
 
அதாவது இந்த இல்முடைய முக்கியத்துவத்தை பற்றி நம்முடைய ஸஹாபாக்கள் தாஃபியீன்கள் அந்த எந்த அளவுக்கு அதிலே அவங்க தீவிரமாக இருந்தார்கள். சொல்லிட்டு. இன்னொரு ஒரு சம்பவத்தைப் பார்க்கிறோம்.
 
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு உடைய வஃபாத்துக்குப் பிறகு ஒரு அன்சாரி வாலிபர் கிட்டே போறாங்க. இரண்டு பேரும் ஒரே வயசு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணிக்கும்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு 13 வயது. 
 
அப்போ அந்த அன்சாரி வாலிபர் கிட்டே போய் சொல்றாங்க இப்போ ரஸூலுல்லாஹ் மவுத்தா போயிட்டாங்க. ஸஹாபாக்கள் தான் மீதம் இருக்காங்க. வாங்க நம்ம போய் இல்மை படித்துக் கொள்வோம். அப்படின்னு சொல்லிட்டு, இப்போ நான் பயானுடைய கடைசி நிலைமைக்கு வரேன். அப்போ அந்த அன்சாரி சொல்றாரு.
 
ரஸூலுல்லாஹ் மவுத்தா போயிட்டாங்க தான்‌ ஏம்பா இவ்வளவு ஸஹாபாக்கள் பெரியவர்கள் எல்லாம் இருக்கும் பொழுது நம்மகல்வி படிச்சி என்ன செய்து விடப் போறோம். மக்கள் என்ன நம்மிடமா வந்து கேட்க போறாங்க.அப்படி என்று சொல்லி நான் வரவில்லை என்றார். 
 
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அன்ஹு. என் வழியில் என்னை விட்டுவிடு என்று சொல்லிவிட்டு அபுபக்கர் உடைய வீட்டுப் படியில் ஏறி இறங்கினாங்க. உமருடைய வீட்டுப் படியில் ஏறி இறங்கினாங்க. 
 
உஸ்மானுடைய வீட்டு படியை அலி ரலி அன்ஹு உடைய வீட்டு படியை. இப்படி. ஒவ்வொரு பெரிய பெரிய பெரிய ஸஹாபாக்கள் அதுபோன்று ரஸூலுல்லாஹ் உடைய காலத்திலே இருந்த வாலிப ஸஹாபாக்கள் யாரெல்லாம் ரஸூலுல்லாஹ் உடைய மஸ்ஜிதில் ஹதீஸை படித்தார்களோ, அவர்களுடைய வீட்டு வாசலை தட்றாரு.
 
அவர்களுக்குப் பணிவிடை செய்தாரு. கல்வியை (தேடினாரு) ஒரு காலம் வந்துச்சு பெரிய ஸஹாபாக்கள் இறந்து போயிட்டாங்க. வாலிப ஸஹாபாக்களா இருந்தவர்கள். வயோதிகம் ஆகி அவர்களும் இறந்துவிட்டார்கள்.
 
ரஸூலுல்லாஹ் உடைய காலத்திலே சிறிய ஸஹாபாக்களாக இருந்தவர்கள் தான் இப்போ மீதம் இருந்தாங்க. அந்த நேரத்திலே பார்த்தா இப்னு அப்பாஸ் ரலி அன்ஹு அவர்களை சுற்றி ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்றார்கள். அப்போ அதை அந்த அன்ஸாரி ஸஹாபி சின்ன வயதில் இருந்தவரு ரஸூலுல்லாஹ் உடைய காலத்திலே அப்போ அவர் சொன்னார் நீங்க விஷயத்தை புரிஞ்சுகிட்டிங்க நான் விஷயத்தை புரியலை. இப்னு அப்பாஸ்.
 
நீங்க தேர்ந்து எடுத்தது மிகச் சிறந்தது என்று சொன்னார் நல்லா கவனியுங்க இதிலென்ன விஷயத்தை விட்டு நம்ப இதுலே புரிய வரும் எந்த இடத்திலே இப்னு அப்பாஸ் ரலி அன்ஹு ரஸூலுல்லாஹ் உடைய ஸஹாபாக்களை தேடித் தேடி போய் கல்வியைத் தேடி இருக்க வில்லை என்றால் நமக்கு இன்னைக்கு குர்ஆனுக்கு விளக்கம் கிடைத்து இருக்காது.
 
இன்றைக்கு சிக் உடைய 100 கணக்கான ஆயிரக்கணக்கான சட்டங்களுக்கு உண்டான தீர்வு கிடைத்து இருக்காது குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் உண்டான ஆயிரக்கணக்கான ஹிக்மத்துகள் ஞானங்கள் கிடைத்து இருக்காது இப்னு அப்பாஸ் ரலி அன்ஹு அவங்க மூலமா ஆயிரக்கணக்கான தாஃபியீன்களை, உலமாக்களை, ஃபுத்தஹாக்களை, முஹஜ்ரீஸ்களை அவர்களை நாம் அடைந்து இருக்க முடியாது.
 
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு இல்லையென்றால் ஆயிரக்கணக்கான தாஃபியீன்கள் உடைய உலமாக்களை நாம் அடைந்து இருக்க முடியாது. என்ன காரணம் சகோதரர்களே.எப்படா அப்பாஸ் கல்வியை தேடினார் அலைந்தார் அதற்காக வேண்டி சொன்னார்கள்.
 
நான் கல்வி கற்கும்போது இழிவை நான் பொருட்படுத்தவில்லை இப்போது அல்லாஹுத்தஆலா என்னை ஆசிரியராக வைத்திருக்கிறான் கண்ணியத்தை அல்லாஹ் கொடுத்திருக்கிறான் என்று ஆகவே நம்முடைய தாயிகளாக இருக்கக்கூடியவர்கள் எதுக்கு இந்த விஷயத்தை நம்மை இன்னைக்கு சொல்றோம்னா. நான் ஆரம்பத்தில நான் சொன்னதை திரும்ப பயானுடைய கடைசியிலே ஈீீகொண்டு வாங்க.
 
நீங்க தாவா கொடுக்கும்பொழுது (மதுஊ) அழைக்கப்பட்ட அந்த நபர் உங்களைத்தான் பார்ப்பாரு. நீங்க தான் அவருக்கு குர்ஆனும் நீங்க தான் அவருக்கு ஹதீஸும் நீங்கதான் அவருக்கு ஸஹாபியும் நீங்க தான் அவருக்கு தாஃபியீனும் நீங்க தான் அவருக்கு இஸ்லாமே.
 
அப்போ உங்களிடத்திலே இபாதத் எப்படி இருக்கு உங்களுடைய அகீதா எப்படி இருக்கு உங்களுடைய அக்லாக் எப்படி இருக்கு என்று பார்ப்பார் அதை வைத்து தான் தன்னுடைய மார்க்கத்தை கட்டமைக்க போறாரு நீங்க சொல்லலாம் என்னை பார்க்காதீங்க நீங்க குர்ஆனை ஹதீஸை படிங்க என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனா கண்டிப்பா.
 
உங்களைக் கொண்டு தான் அவர் தர்க்கம் அடைவார். அவருடைய உள்ளத்திலே தாக்கம் ஏற்படுத்தக் கூடியவர் நீங்கள் தான். உங்களைப் பார்ப்பாரு. நீங்கள் தொழுவதை பார்ப்பாரு. எப்படி ஒரு புள்ள தன்னுடைய அத்தா தொழுவதை பார்க்குமோ, அதேபோல நீங்க தொழுவதை பார்ப்பாரு. உங்களைத்தான் அவர் உற்றுக் கவனிப்பார்.
 
உங்ககிட்ட மார்க்கப்பற்று சரியா இருந்தா அவருடைய மார்க்கப்பற்று சரியாய் இருக்கும். அதை புரிந்து கொள்ளுங்கள். இப்போ விஷயம் அது தான் அப்போ இந்த இல்மை நீங்க தேடணும் இதிலே இன்னொரு விஷயத்தையும் நான் சொல்றேன்.
 
இல்மு இல்லாம தாவா கொடுக்கும்போது அகீதாவில் வரக்கூடிய ஒரே ஒரு சின்ன பிரச்சனை ஆனால் பயங்கரமான பிரச்சனை. சமுதாயத்திலே பெரிய daee என்று அறியப்பட்ட ஒரு மனிதர் அவர் வந்து மாற்று மதத்தவருக்கு வந்து இஸ்லாம் கேள்வி பதில் வைத்தாள் ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய கூட்டத்திற்கு,
 
வந்து நான் முஸ்லீம்களை கூட்டிட்டு வந்து கேள்வி-பதில் எல்லாம் கேட்பாங்க பயங்கரமா வந்து அவர் பதில் எல்லாம் சொல்வார் சரியான அகீதாவை படிக்காதனாலே ஒரு பயானிலே அவர் சொல்றாரு. அல்லாஹ்வுடைய ஸிஃபத் பற்றி பேசும்போது அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
அல்லாஹ் எப்படி இருப்பான் என்றால், இப்போ என்னை பாக்குறீங்கள நான் எப்படி இருக்கேன். அந்த மாதிரிதான் இருப்பான். ஒரு முகம் இருக்கும். இரண்டு கை இருக்கும் இப்படி இருக்கும். அந்த மாதிரி தான் அல்லாஹ் இருப்பான். மனிதரைப் பார்த்து இருக்கீங்க இல்ல மனிதன் மாதிரிதான் இருப்பார் அப்படின்னு பேசுறாரு அல்லாஹ் பாதுகாக்கணும். எவ்வளவு பெரிய (தஷ்பி)
 
எதனாலே இந்த பிரச்சனை? அகீதா இல்லாதனாலே இந்த பிரச்சனை. அதேபோல ஸஹீஹான ஹதீஸை பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது அப்போ அந்த ஸஹீஹான ஹதீஸ்களை விமர்சனம் செய்யப்படும் பொழுது அதில் தனக்கு தெரியலைனா நாளைக்கு சொல்றேன் சொல்லலாம் நாளைக்கு சொல்றேன் சொல்லலாம் அல்லது அடுத்த சபையிலே சொல்றேன் சொல்லலாம் எப்போ அந்த ஸஹீஹான ஹதீஸின் மீது கேள்வி வைக்கப்பட்டு அந்த கேள்விக்கு பதில் தெரியவில்லையோ உடனே அப்படி ஒரு ஸஹீஹான ஹதீஸே இல்லை என்று மறுத்து விடுவது.
 
அப்போ குர்ஆனிலே உள்ள ஒரு ஆயத்தை ஒருத்தன் விமர்சனம் செய்தார் என்று சொல்லி அப்படி ஒரு குர்ஆனுடைய ஆயத்தே இல்லை என்று சொன்னால் அது எப்படிப்பட்ட நிராகரிப்போர் அதேபோலதான் ஸஹீஹான ஹதீஸ் என்று முடிவு செய்யப் பட்டதை ஒருத்தர் விமர்சனம் செய்கிறார் என்பதை தாண்டி ஒரு யகுதியோ அல்லது நஸ்ரானியோ விமர்சனம் செய்கிறார் என்பதற்காக வேண்டி அது ஹதீஸில் இல்லை என்று மறுத்தால் அவருடைய நிலைமையும் அதே நிலைமைதான்.
 
இது தாவாவில் ஏற்படுது பலருக்கு ஏற்பட்டு கொண்டு இருக்குது. அந்த வழிகேடுகளை நம்ம நாடிகள் கிட்ட நம்ம தொடர்ந்து பார்க்கிறோம். கடைசியிலே ஒரு கட்டத்திலே அவங்க பிரபலமாகி அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸ் வந்து அவர்களுக்கு ஒரு ஸ்டேஜ் பிளாட்பார்ம் அவங்க சொன்னால்,
 
எதையும் மக்கள் கேட்பார்கள் என்ற நிலைமை வந்து கடைசியில நீ அவங்களுடைய தப்பை எத்தனை ஆயத்தை வைத்து நீ எடுத்து அவங்களுக்கு சொன்னாலும் எத்தனை ஹதீஸை வைத்து நீ அவர்களுக்கு எடுத்துச் சொன்னாலும் அவங்க திருத்திக் கொள்ள மாட்டார்கள் திருந்த மாட்டாங்க மாறாக குர்ஆனையும் ஹதீஸையும் திரிக்க பார்ப்பாங்க.
 
குர்ஆனையும் ஹதீஸையும் மாற்ற பார்ப்பாங்க பியார் கியா என்று சொல்லி உங்களை அவர்களுடைய கொள்கைக்கு உங்களை அவர்களுடைய கருத்துக்கு corvinence பண்ண பார்ப்பார்களே தவிர குர்ஆன் ஹதீஸுக்கு corvinence ஆகி அவங்க வரமாட்டாங்க.
 
இந்த நிலைமை ஒரு daee க்கு ஏற்பட்டுவிடும். அவரிடத்திலே சரியான மண் ஹஜ் உடைய அகீதா உடைய இல்மு இல்லையென்றால் அடிச்சு சொல்றேன் இந்த நிலைமை ஏற்படும் முன்னாடி காலத்திலேயும் ஏற்பட்டு இருக்கு இப்போவும் நம்முடைய சமகாலத்திலும் ஏற்பட்டு இருக்கு அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக அடுத்த விஷயத்தை சொல்லி முடிக்கிறேன்.
 
உடனே நீங்கள் எல்லாம் சில பேர் இன்றைக்கு அப்படி ஒரு கூட்டம் இருக்கும். இந்தியாவிலே ஆலிம்கள் இல்லை. இந்தியாவிலே உலமாக்கள் இல்லை. இந்தியாவிலே யாரும் அதில் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை.
 
இதுக்கு நான் என்ன உதாரணம் சொல்வேன் சொன்னா நம்ம தமிழ்நாட்டிலே எல்லாத்துக்கும் ஒரு அழகான பழமொழி வைத்து இருப்பாங்க உதாரணம் வெச்சிருப்பாங்க பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டு என்று நினைக்குமாம் அது யாரு பூனை. உள்ளத்தை பார்த்தா பூனை பூனை யார்கிட்ட சொல்லுச்சு அது எந்த லாங்குவேஜ்ல விளக்குனாங்க என்று எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க சரிங்களா. சொல்வாங்க அந்த மாதிரிதான்.
 
இந்த ஜாஹிலுக்கு எந்த ஜாஹிலுக்கு இப்போ சொன்னேன்ல ஒருத்தர். அந்த ஜாஹிலுக்கு அவருடைய அரிஜஹலு தெரியாம, அவர் என்ன நினைக்கிறார் சொன்னா இந்தியாவிலே ஆலிம்கள் இல்லை இந்தியாவிலே உலமாக்கள் இல்லை ஹதீஸ் தெரிஞ்சவங்க இல்லை மன்ஹஜ் தெரிஞ்சவங்க இல்லை எங்க அப்போ, இருக்காங்க.
 
இப்போ ஒரே இடம் மதீனாவில் மட்டும் தான் இருக்காங்க. அல்லது எமன் நாட்டில் மட்டும் தான் இருக்காங்க. மதினாவில் ஆலிம்கள் இருக்கிறார்கள். என்று மறுக்கவில்லை. எமன் நாட்டில் ஆலிம்கள் இருக்கிறார்கள் என்று மறுக்கவில்லை. ஆனால் இந்தியாவில் ஆலிம்களே இல்லை என்று சொல்வதோ அல்லது இந்தியாவில் இருக்கக்கூடிய ஆலிம்களை ரொம்ப சீப்பாக ரொம்ப சாதாரணமா எடை போடறாங்க இல்ல.
 
அல்லாஹ்வுடைய அடியார்களே. மிகமிக வருந்தத்தக்க செய்தி (இவர்கள் மேலே பரிதாபப்படும்)(2) கையில் உள்ள மாணிக்கக் கல்லை தெரியாத முட்டாள்கள் இவர்கள் மாணிக்க கல் இன்றைக்கு இந்தியாவிலே உண்மையிலே மதினாவிலே போய் அங்கே உள்ள ஆலிம்கள் கிட்ட பேசுனா உங்க இந்தியாவிலே இல்லாத ஆலிம்களா என்று அவங்க சொல்றாங்க.
 
அவங்க நமக்கு பேர்கள் எடுத்து சொல்றாங்க அந்த மாதிரியான ஆலிம்களை அல்லாஹ் இங்கே கொடுத்து இருக்கான் அது போக அங்கே படித்துவிட்டு வந்த ஆலிம்களும் நம்மிடத்தில் இருக்காங்க அங்கே இருந்த பெரிய பெரிய உலமாக்கள் இடத்திலே முஹத்திஸ்கள் இடத்திலே ஃபுக்காகள் இடத்திலே படித்துவிட்டு வந்த ஆலிம்கள் நம்முடைய நாட்டிலே இருக்காங்க.
 
நம்ம மதரஸாக்களில் இருக்காங்க ஆனா மக்களுக்கு அவர்களைப் பார்த்தால் தெரியலை ஏன்னா அவர்கள் சாதாரணமா இருக்காங்க. குர்தா பைஜாமா போட்டு கொண்டு 50 ரூபாய்க்கு ஒரு டிரஸ் போட்டுகிட்டு சாதாரணமாய் இருக்காங்க சாதாரண செருப்பு சாதாரண மக்களோடு வருவது அது அவர்களுக்கு தெரியலை அப்போ அங்க உள்ளவங்க எல்லாம் சாதாரணமாக இல்லையா என்று சொன்னால் அவர்களும் சாதாரணமா தான் இருக்காங்க.
 
ஆனால் இவருடைய இந்த எளிமை ரொம்பவும் சாதாரணமாக இருக்கிறதனாலும் சகஜமாக இருக்கிறதனாலும் இவர்களுக்கு அவருடைய மதிப்பு தெரியலை. நான் என்ன சொல்றேன் நீங்க அவங்க கிட்ட போய் உட்கார்ந்து பேசி இருக்கீங்களா. இவர்களுடைய கல்வி சபையிலே அமர்ந்து இருக்கீங்களா. இவருடைய பயான்களை ஏதாவது ஒரு பயானையாவது கேட்டு இருக்கிங்களா. எதுவுமே கிடையாது.
 
எதுவுமே இல்லாம எவனோ ஒருத்தன எங்கிருந்தோ உளறினால் இந்தியாவிலே இல்மில்லே இந்தியாவிலே உலமாக்கள் இல்லை என்று சொல்லி அவனுடைய பேச்சைக் கேட்டுக்கிட்டு அப்படியே உளறி கிட்டு இருக்கு இந்த கூட்டம். 
 
இவங்க வந்து தங்களது பெயரை வைத்து விட்டது சூப்பர் செல்பி அட்வான்ஸ் செல்ஃபி ரியல் செல்ஃபி அப்படின்னு சொல்லிட்டு என்ன வேணும்னாலும் பேர் வைத்துக் கொள்ளுங்கள் பேரு வைத்து நாளைக்கு அல்லாஹ் தரஜாவை கொடுத்துவிட மாட்டான். உள்ளே இருக்கக்கூடிய இல்மை வைத்து அமலை வைத்து அல்லாஹூஆதலா தரஜாவை கொடுப்பான்.
 
எனவே என்னுடைய  சகோதரர்களுக்கு நான் இங்கு சில விஷயங்களை பதிய வைத்து நான் இந்த உரையை முடிவு செய்கிறேன் என்று தாயியாக இருப்பவர் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட வெற்றியாளராக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 
உடைய உண்மையான தாயியாக அவர் ஆக வேண்டும் என்றால், இல்ம் உள்ள தாயியாக ஆகவேண்டும். இல்ம் உள்ளவரை தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாயியாக ஆக்கி அவர்கள் தாவா செய்வதற்கு அனுப்புனாங்க.
 
இல்மு இல்லாதவரை ரஸூல் (ஸல்) தாயியாக அனுப்பவில்லை. அதைப்போல இந்த இயல்பு என்பது முதலாவதாக மன்ஹஜ், அகீதா உடைய இல்மு அப்புறம் இபாதத் உடைய இல்மு என்று இவை அனைத்தையும் அஹ்லுஸ் சுன்னா ஜமாத் உடைய அகீதாவின் அடிப்படையிலே தேடணும்.
 
மூன்றாவது உலமாக்கள் நமக்கு மதினா வரைக்கும் போறதுக்கு முடிந்தால் அங்கே உள்ள உலமாக்கள் அதே போல இங்கு உள்ள உலமாக்களை விட்டு நம்ம தேவை அற்றவர்களாக ஆகிவிடக்கூடாது அவர்களைப் போய் சந்திக்கணும் அவர்களுடைய பயான்களை கேட்கணும் அவர்களுடைய இல்லங்களுக்கு தேடி சென்று அவர்கள் நாம் அறிவுரைகள் கேட்கணும்.
 
நமக்கு தாவாவிலே வரும் சந்தேகங்களை குழப்பங்களை அவர்களிடத்தில் எடுத்துச் சொல்லி அதற்கு உண்டான விளக்கங்களை தீர்வுகளை நம்ம தேடனும்.
 
இத்தகைய நல்ல ஒரு அமைப்போடு நம்முடைய சிந்தனைகளை அதைப்போல நம்முடைய தாவாவில் வழிகேடுகள் வராமல் நாம் செய்வோம். பாதுகாத்துக் கொண்டு செல்வோமாக என்று எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக என்னுடைய இந்த உரையை முடித்துக்கொள்கிறேன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعاً: «إنَّ مَثَلَ مَا بَعَثَنِي اللهُ بِهِ مِنَ الهُدَى والعِلْمَ كَمَثَلِ غَيْثٍ أَصَابَ أَرْضًا فكانتْ مِنها طَائِفَةٌ طَيِّبَةٌ، قَبِلَتْ الماءَ فَأَنْبَتَتِ الكَلَأَ والعُشْبَ الكَثِيرَ، وكَان مِنها أَجَادِبُ أَمْسَكَتِ الماءَ فَنَفَعَ اللهُ بها النَّاسَ، فَشَرِبُوا مِنْهَا وسَقَوا وَزَرَعُوا، وأَصَابَ طَائِفَةً مِنها أُخْرَى إنَّما هِي قِيعَانٌ لا تُمْسِكُ مَاءً ولا تُنْبِتُ كَلَأً، فذلك مَثَلُ مَنْ فَقُهَ في دِينِ اللهِ وَنَفَعَهُ بِما بَعَثَنِي اللهُ بِهِ فَعَلِمَ وعَلَّمَ، ومَثَلُ مَنْ لم يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا ولم يَقْبَلْ هُدَى اللهِ الذي أُرْسِلْتُ بِهِ 
 
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI - 600001.
 
muftiomar@gmail.com , 044 25247866, 9840174121, 9884469044
 
Facebook:
 
Youtube:
 
Website: