HOME      Khutba      பரகத்தான நிகாஹ் | Tamil Bayan - 755   
 

பரகத்தான நிகாஹ் | Tamil Bayan - 755

           

பரகத்தான நிகாஹ் | Tamil Bayan - 755


பரக்கத்தான நிகாஹ்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : பரக்கத்தான நிகாஹ்!
 
வரிசை : 755
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 09-12-2022 | 15-05-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!  அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்தும், அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக! 
 
அல்லாஹ்வுடைய வேதத்தையும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவையும் பற்றி பிடிக்குமாறு உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நமக்கு நேர்வழியை தந்தருள்வானாக! அந்த நேர் வழியிலே உறுதியையும் இஸ்திகாமத்தையும் நிலைத்தன்மையும் தந்தருள்வானாக! ஆமீன்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு ஒரு அழகிய முன்மாதிரியாக வந்தார்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
 
அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு - அல்லாஹ்வையும் மறுமை நாளையும் பயந்தவராக இருப்பவருக்கு - திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும், அவர் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்பவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 33 : 21)
 
தொழுகையை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதது போன்று நிறைவேற்ற வேண்டும். 
 
இப்படி வணக்க வழிபாடுகள் ஒவ்வொன்றையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை அறிந்து, கற்று, அதன்படி நாம் அந்த வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். 
 
அப்படி நிறைவேற்றினால் அல்லாஹ்விடத்திலே அந்த வணக்க வழிபாடுகளுக்கு அங்கீகாரம் இருக்கிறது. அல்லாஹு தஆலா அந்த வணக்க வழிபாடுகளுக்கு நமக்கு நற்குலி தருவதாக வாக்களிக்கிறான்.
 
வணக்க  வழிபாடுகள் மட்டும் கொடுக்கப்பட்டு ரசூல் அல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்டார்களா? அல்லது ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் கற்றுக் கொடுப்பதற்காக, செயல்படுத்தி காட்டுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்டார்களா?
 
கொஞ்சம் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். சிறுநீர் கழிக்க சென்றால் கூட எப்படி செல்ல வேண்டும்? என்ன துஆ செய்துவிட்டு செல்ல வேண்டும்? எந்த காலை வைக்க வேண்டும்? எப்படி உட்கார வேண்டும்? எந்த திசை நோக்கி உட்கார வேண்டும்? கழித்ததற்கு பிறகு எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? எத்தனை முறை சுத்தம் செய்ய வேண்டும்? எதனால் சுத்தம் செய்ய வேண்டும்? எதனால் சுத்தம் செய்யக் கூடாது?
 
இத்தகைய ஒழுக்கங்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்திருக்கிறார்களே! நிகாஹ் குறித்த ஒழுக்கங்களை கற்றுத் தரவில்லையா? திருமணம் குறித்த வழிகாட்டலை அவர்கள் நமக்கு செய்து காட்டவில்லையா? 
 
ஏன், இன்று நாம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கலாச்சாரத்திலிருந்து இவ்வளவு தூரம் விலகிச் சென்றிருக்கிறோம்? நம்முடைய செல்வம், நம்முடைய சமூக அந்தஸ்து, நம்முடைய பொருளாதாரம் இதுவெல்லாம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னாவை மீறுவதற்கு அவர்களின் கலாச்சாரத்தை புறக்கணிப்பதற்கு காரணமாக அமைந்தால் இந்த செல்வமும் இந்த பொருளாதாரமும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தா? அல்லது அல்லாஹ்வுடைய அதாபா?
 
இந்த செல்வத்தால் இந்த பொருளாதாரத்தால் அல்லாஹ்விடத்திலே நமக்கு கூலி கிடைக்குமா? அல்லது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடத்தில் தண்டனை கிடைக்குமா? யோசித்துப் பாருங்கள்!
 
இன்று, முஸ்லிம் சமுதாயத்தில் மிகப்பெரிய வீண் விரயம், பொருளாதார செலவழிப்பு ஒன்று நடக்கிறது என்றால் அது முஸ்லிம்களுடைய திருமணத்தில்தான்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً
 
எவ்வளவு அழகான வழிகாட்டுதல்! பரக்கத் என்றால் அல்லாஹ்வுடைய அன்பு; அல்லாஹ்வுடைய ரஹ்மத்; அல்லாஹ்வுடைய கருணை; அல்லாஹ்வுடைய திருப்தி போன்ற அத்தனை நன்மைகளையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை தான் பரக்கத் என்பது.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: நிகாஹிலே மிக பரக்கத்தான நிகாஹ் என்பது செலவுகள் குறைந்த நிகாஹ் ஆகும்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 24529.
 
பஃபே நிகாஹ் அல்ல; ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் உடைய நிகாஹ் அல்ல. நாம என்ன சொல்வோம்? அவர் நிகாஹ்வை நல்லா பரக்கதா செய்தாருங்க என்று. 
 
எங்கே உணவுகள் வீண்விரயம் செய்யப்படுமோ, எங்கே ஏழைகள் புறக்கணிக்கப்படுவார்களோ, எந்த இடத்தில் வைத்தால் செல்வந்தர்களை தவிர யாரும் வரமுடியாதோ, சாதாரண ஆடை அணிந்தவர்களும், உறவுகளிலே உள்ள சாதாரணமானவர்களும், நண்பர்களில் உள்ள சாதாரணமானவர்களும் வர முடியுமா?
 
அப்படியே வந்தால் அதற்காக அவர்கள் எடுக்கக்கூடிய மெனக்கெடுகள், சிரமங்கள் அவர்களுடைய தகுதிக்கு மேலாக  இருக்கும். யோசித்துப் பார்க்க வேண்டும்! 
 
நாம் என்ன விளங்கிக் கொண்டோம்; விளக்குகளைக் கொண்டு, ஆடம்பரமான வாகனங்களைக் கொண்டு, ஆடம்பரமான இடங்களை கொண்டு வீண்விரயம் செய்யப்படுவதை பரக்கத்தான நிகாஹ் என்பதாக.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: திருமணங்களில் செலவுகளும் எதில் மிக மிக எளிமையாக இலகுவாக இருக்குமோ அது நிகாஹிலே பரக்கத். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 24529.
 
இன்று, சுன்னத் எப்படி ஆகிவிட்டது என்றால், ஒன்றும் இல்லாத ஃபகீர்கள் அப்படி எளிமையாக செய்வார்கள்; குடிசை வீட்டிலே இருக்கக் கூடிய ஏழைகள் உடைய  நிகாஹ் அப்படி இருக்கும்.
 
நாங்கள் எல்லாம் எப்படி, எங்களுடைய தகுதி என்ன? எங்களுடைய தொடர்பு என்ன? எங்களுடைய வசதி என்ன? இப்படியாக தன்னுடைய செல்வத்தை நிரூபிப்பதற்குரிய ஒரு ஸ்டேட்டஸாக ஒரு ஸ்டேண்டாக, தன்னுடைய சமுதாயத்தில் உள்ள செல்வ மதிப்பை நிலைநிறுத்துவதற்கு உண்டான முகஸ்துதியாக முஸ்லிம்களுடைய திருமணம் மாறி இருக்கிறது.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: திருமணத்தில் பரக்கத்தால் மிக மகத்துவமானது எந்தத் திருமணம் செலவுகளால் குறைவாக இருக்குமோ அதுவாகும்.
 
அங்கே மஹர் ஒரு கண்ணியமான மஹராக இருக்கும். பெருமைக்குரிய மஹராக இருக்காது. எழுதுகிறார்கள்; மஹர் ஒரு கோடி ரூபாய்க்கு வைர நெக்லஸ் என்பதாக. எத்தனையோ லட்சங்களுக்குரிய நகைகளை எழுதுகிறார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 400 திர்ஹங்கள்  மதிப்புடைய அந்த மஹரை தவிர அவர்களின் காலத்திலே மஹர்கள்  தாண்டவில்லை.
 
சகோதரர்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். எப்படி பெண்களிடத்தில் வரதட்சணை கேட்பது இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றோ, இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு குற்றமோ அதுபோன்றுதான் பெண் வீட்டார்களும் எனக்கு இவ்வளவு மஹர் வேண்டும் என்று டிமான்ட் செய்வதும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்று. 
 
மஹர் கொடுப்பது கணவனுடைய தகுதிக்கு ஏற்ப கணவனுடைய வசதியிலிருந்து கொடுக்க வேண்டுமே தவிர, பெண் டிமாண்ட் செய்ததாக, இவ்வளவு தொகை வேண்டும் என்று கூறியதாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய 23 ஆண்டுகால குடும்ப வாழ்க்கையிலே, சஹாபாக்களுடைய சமூக வாழ்க்கையிலே ஒரு ஹதீஸை கூட நீங்கள் பார்க்க முடியாது.
 
கணவர் கொடுப்பார். மனைவியோ மனைவியின் குடும்பத்தார்களோ அதை ஏற்றுக் கொள்வார்கள். 
 
அல்லாஹு தஆலா அப்படித்தான் வழி காட்டுகிறான்:
 
فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ
 
அல்லாஹ் தனக்கு கொடுத்ததில் இருந்து அவர் செலவு செய்யட்டும். (அல்குர்ஆன் 65 : 7)
 
திருமணத்திற்கு பிறகு நீங்கள் அன்பளிப்பு செய்கிறீர்கள். உங்களுடைய மனைவிக்கு வீடு வாங்கி தருகிறீர்கள்; வாகனம் வாங்கி தருகிறீர்கள்; அவருடைய உடல் எடை அளவுக்கு நகை செய்து போடுகிறீர்கள். அது உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் உங்களுடைய மனைவிக்கும் இடையிலே உள்ளது. 
 
பொது வாழ்க்கை என்று வரும்போது சமூகத்திலே, அறிவிக்கப்பட வேண்டிய ஒன்று என்று வரும்போது, வரம்பு மீறுதல் அங்கே இருக்கக் கூடாது. 
 
ஒரு மஜ்லிஸிலே மஹர் இத்தனை லட்சம், இத்தனை தங்க நகைகள், இவ்வளவு வைர நகைகள் என்று எழுதப்படுகிறது என்றால், அங்கு இருக்கக்கூடிய சமுதாயத்தின் ஏழைகளுடைய மனநிலையை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்! 
 
இதில் நவீன தவ்ஹீது கலாச்சாரம் வேறு, அந்த நகையெல்லாம் வைத்து போட்டோ எடுத்து கொடுப்பதாக, எல்லாம் ஒரு ஷோவாக, இப்பவே கொண்டு போய் பொண்ணு கையில குடுங்க, அப்படியே நகையெல்லாம் விரிச்சி கொண்டுட்டு போவாங்க. 
 
என்ன முட்டாள்தனம்! மார்க்கத்தில் எங்கே இருக்கிறது? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய வாழ்க்கையில சஹாபாக்களின் கலாச்சாரத்தில் எங்கே இருக்கிறது?
 
மஹர் குறிப்பிடப்படும், அவ்வளவுதான். அந்த சபையிலேயே அந்த பெண்ணிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதே கிடையாது. நீங்கள் இரவில் சந்திக்கும் போது கொடுங்கள்; அதற்கு முந்தைய நாளே கொடுத்து அனுப்பி விடுங்கள்; அடுத்த நாள் கொடுங்கள். 
 
இந்த மஹர் என்று குறிப்பிட்டால் போதுமானது. அல்லது பொதுவாக மஹர் கொடுத்து என்று குறிப்பிட்டால் அடுத்த நாள் கூட அதை பிக்ஸ் செய்து கொள்ளலாம், அவருடைய தகுதிக்கு ஏற்ப இத தருகிறேன் என்று. 
 
கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்படி உணவு ஒரு தேவையோ, நீங்க யாராவது நான் மதியான சாப்பாடு சாப்பிட போறேன் அப்படின்னு போஸ்டர் அடிப்பீங்களா? நான் ரொம்ப பெரிய பணக்காரர், அதனால நான் சாப்பாடு சாப்பிடும் பொழுது போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டு எல்லாருக்கும் இன்விடேஷன் அனுப்பிட்டுதான் நான் மத்தியான சாப்பாடு சாப்பிடுவேன் என்று யாராவது சொல்வீர்களா? 
 
உண்பது குடிப்பது ஒரு வயிற்றின் தேவையாக இருப்பது போல, நிகாஹ் என்பது மர்மஸ்தானத்தினுடைய ஒரு தேவை, அவ்வளவுதான். அதை ஹலாலாக செய்து கொள்வதற்கும் மார்க்கம் வழிகாட்டி இருக்கிறது. 
 
ஹதீஸ் எப்படி கூறுகிறது, நடந்த நிக்காஹை அறிவிப்பு செய்யுங்கள். பிறகு நிக்காவிற்கு பிறகு வலிமா கொடுக்கணும். (1)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : இப்னு மாஜா : 1895, புகாரி : 2048.
 
வலீமா என்பது என்ன? தன்னுடைய அண்டை வீட்டார்களை அழைப்பது; முஹல்லா வாசிகளை அழைப்பது; தன்னுடைய மஸ்ஜிதிலே தன்னோடு அன்றாடம் ஐந்து வேளை தொழுதவர்களை அழைப்பது. 
 
அமெரிக்காவிலே உள்ளவர் அழைக்கப்படுகிறார். தன்னோடு மஸ்ஜிதிலே முஹல்லாவிலே தொழுதவர் புறக்கணிக்கப்படுகிறார். இது என்ன வலிமா? அமெரிக்காவிலே ஐரோப்பாவிலே வசிப்பவருக்கு டிக்கெட் போட்டு வரவேற்கப்படுகிறது. அவர் தங்குவதற்கு உண்டான வசதிகள் செய்யப்படுகின்றது. 
 
இங்கே அன்றாடம் தன்னுடைய முஹல்லாவிலே தன்னோடு தோள் ஒட்டி நிற்கக்கூடிய ஒரு பாமர முஸ்லிம் அங்கே மறைக்கப்படுகிறார்; அல்லது புறக்கணிக்கப்படுகிறார்; அல்லது விடப்படுகிறார். 
 
இது என்ன வலிமா? உங்களோடு முஹல்லாவிலே அன்றாடம் ஐந்து வேளை தொழக்கூடிய அந்த முஸ்லிம்களை உங்களுடைய வீட்டுக் அழைத்து சென்று அந்த விருந்தை கொடுங்கள். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு திருமணம் அல்ல, நாமெல்லாம் மார்க்கத்திலே விளையாடி விடுவோம். எப்படியெல்லாம் மார்க்கத்தை திருப்புவதற்கு தந்திரங்களை நம்மிடத்தில் தான் கேட்க வேண்டும். ஹதீஸ்களை எப்படி வளைப்பது? ஹதீஸ்களுக்கு எப்படி கருத்து சொல்வது? 
 
நடத்தக்கூடிய போராட்டங்களுக்கு ஒரு உதாரணம், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூ சுஃப்யான் உடைய அந்த வியாபார கூட்டத்தை வழி மறிக்க சென்றார்கள் அல்லவா, அதுதான் இதற்கு ஆதாரம். 
 
இமாம் புகாரி, இமாம் அபு ஹனிபா, இமாம் மாலிக், இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய இஜ்திகாத் எல்லாம் தோற்றுவிடும். அவர்களுடைய ஆராய்ச்சி எல்லாம் இன்றைய காலத்தினுடைய முஸ்லிம் அரசியல்வாதிகளுடைய ஆராய்ச்சிக்கு முன்னால் தோற்றுவிடும். 
 
ஆதாரங்களிலிருந்து அப்படியே நோண்டி எடுப்பதிலே இன்று அந்த இமாம்கள் எல்லாம் இருந்திருந்தால் இவர்களுடைய மாணவர்களாக ஆகியிருக்க கூடும்! தனக்கு சாதகமான ஹதீஸ் என்றால், அதிலிருந்து எப்படியாவது தனக்கு விருப்பமான கருத்து எடுப்பது, தனக்கு பாதகமான ஹதீஸாக இருந்தால் எப்படியாவது அதை குறை சொல்லி அதை தூர எரிந்து விடுவது. 
 
இஸ்ரவேலர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த எளிமையை பாருங்கள்!
 
திருமணம் முடிக்கிறார்கள் அனேகமாக ஜைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்களை. அல்லாஹ் திருமணம் முடித்து வைத்து விட்டான். வலீமா கொடுக்க வேண்டும். செய்தி வருகிறது. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
இஷாவுக்கு வரும் பொழுது எல்லா தோழர்களும் தன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய உணவுகளை எடுத்து வாருங்கள் என்று. தோழர்கள் எல்லாம் அந்த உணவுகளை கொண்டு வந்தார்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை வாங்கி சுஃப்ராவிலே விரித்தார்கள். இது உங்களுடைய நபியுடைய வலிமா தஃவத், இதை சாப்பிடுங்கள் என்று சொன்னார்கள். (2)
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1428.
 
என்ன எளிமை பாருங்க. இதில் இருக்கக்கூடிய ஒரு அன்பை பாருங்கள். ஒருவன் திருமணம் முடிக்கிறான், தன்னுடைய மகனுக்கோ மகளுக்கோ திருமணம் முடித்து வைத்துவிட்டு, இன்றைய காலத்தில் அவன் இரவிலே நிம்மதியாக தூங்க செல்ல முடியுமா? நாளை எத்தனை பேருக்கு பில்லுக்கு காசு கொடுக்க வேண்டும் என்ற டென்ஷன். 
 
அதுல எத்தனை பேருக்கு பாக்கி? எத்தனை பேருக்கு கால தாமதம்? ஒரு வாரம், ஒரு மாசம், வந்தவர்கள் பிரியாணி சாப்பிட்டு கதையை முடித்து இருப்பாங்க. ஆனால், செலவு செய்தவன் யார்? கடனாளியாக ஆனது யார்? 
 
உங்களை நீங்கள் கடனாளியாக ஆக்க வேண்டும் என்றால், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதை தவிர வேறு காரணம் கிடையாது. இஸ்லாமிய மார்க்கத்தில் நான் ஜிஹாதுக்கு செலவு செய்தேன்; நான் யதீமுக்கு செலவு செய்தேன்; நான் மிஸ்கீனுக்கு செலவு செய்தேன்; நான் ஃபகிருக்கு செலவு செய்தேன். எனவே நான் கடனாளியாக ஆகிவிட்டேன் என்று சொல்லலாம். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடனாளியாக ஆகி இருக்கிறார்கள். கலிபா உமர், கலிபா அபூ பக்கர், அலி இன்னும் பெரிய பெரிய சஹாபாக்கள் கடனாளியாக ஆகி இருக்கிறார்கள். 
 
எதற்காக, அல்லாஹ்வுடைய பாதையிலே செலவு செய்ததற்காக. ஏழைகளுக்கு வாங்கி கொடுத்ததற்காக. யதீம்களுக்கு வாங்கி கொடுத்ததற்காக. 
 
இஸ்லாமிய வரலாற்றிலே திருமணம் முடித்து நான் கடனாளியாக ஆகிவிட்டேன் என்று சஹாபாக்களுடைய வாழ்க்கையிலே ஒரு செல்வந்தரை காட்ட முடியுமா? 
 
கடனுக்கும் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இத்தனை கோடிகளுக்கும் இத்தனை லட்சங்களுக்கும் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا 
 
அல்லாஹுத்தஆலா ஒரு ஆன்மாவை அதனுடைய சக்திக்கு மேல் சிரமப்படுத்துவதில்லை. (அல்குர்ஆன் 2 : 286)
 
உன்னால் நின்று தொழ முடியவில்லை என்றால், உட்கார்ந்து தொழு என்று சொல்லக்கூடிய மார்க்கத்திலே, உனது வசதிக்கு மீறி கடன் வாங்கி அதுவும் வட்டிக்கு வாங்கி நீ திருமணம் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எந்த ரப் உன் மீது கடமையாக்கினான்? 
 
நீங்கள் செய்வதால் சமுதாயத்தில் அப்படி பலர் செய்வதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்றால்,
 
مَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒரு கெட்ட உதாரணத்தை ஒருவன் செய்து அதை மக்கள் பின்பற்றுவார்களேயானால் அதை செய்தவர்களுடைய பாவமும் அதை முதலாவது செய்தவனுடைய பாவமும் ஒருசேர அவனுக்கு கிடைக்கும். (3)
 
அறிவிப்பாளர் : ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண்:  1017.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு தொழுகைக்கு மட்டும் முன்மாதிரி அல்ல; நோன்புக்கு மட்டும் முன்மாதிரி அல்ல; ஹஜ்ஜுக்கு மட்டும் முன்மாதிரி அல்ல; திருமணத்திற்கும் முன்மாதிரி. நம்முடைய நிக்காஹ் இதைக் குறித்தும் நாளை மறுமையிலே விசாரிக்கப்படுவோம். விருந்து தானே எப்படி செய்தால் என்ன என்பது கிடையாது.
 
விருந்துக்கு தான் அல்லாஹ் சொன்னான்:
 
وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌
 
உண்ணுங்கள்; பருகுங்கள்; வீண்விரயம் செய்யாதீர்கள் என்று. (அல்குர்ஆன் : 7:31)
 
அன்பான சகோதரர்களே! இன்று நம்முடைய சமுதாயத்தில் எத்தனையோ யத்தீம்களை, எத்தனையோ ஃபகீர்களை, ஏழைகளை படிக்க வைக்க வேண்டிய, அவர்களுடைய கல்விக்கு உதவ வேண்டிய, அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டிய, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டிய, சமுதாயத்திலே ஆதரவு இல்லாதவர்களுக்கு ஆதரவு தர வேண்டிய கடமை நம் மீது இருக்கும் பொழுது, நாளை மறுமையிலே எந்த முகத்தை  கொண்டு அல்லாஹ்வை சந்திப்போம்? 
 
இவ்வளவு லட்சத்தை கோடியை என்னுடைய ஆடம்பரமான திருமணத்திலே செலவு செய்தேன், என்னை சுற்றியுள்ள ஏழைகளை மறந்தேன் என்று அல்லாஹ்விடத்திலே நாம் எந்த முகத்தை கொண்டு சந்திப்போம்? யோசித்துப் பாருங்கள்!
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பின்பற்றுவதை தவிர நமக்கு வேறு நன்மை இல்லை. 
 
இன்று எத்தனை குடும்பத்தார் ஆண் விட்டாராக இருக்கட்டும், பெண் வீட்டாராக இருக்கட்டும், கல்யாணம் முடித்த அந்த ஆணும் பெண்ணும் வேண்டுமானால் ஹனிமூன் செல்லலாம், அவர்கள் இன்பமாக இருப்பார்கள். 
 
ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் எத்தனை மன உளைச்சலிலே இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்!  அந்த திருமணத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட கடன் வாழ்நாள் எல்லாம் அடைக்கக் கூடிய நிர்பந்தங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
 
ஆகவே, அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி திருமணங்களை நடத்தினார்களோ அப்படி நாம் நடத்த வேண்டும்.
 
நம்முடைய ஒரு அடிப்படையான ஒரு சாதாரணமான தேவை உண்பது குடிப்பதை போல அதை எளிமையாக்கி கொள்வோமேயானால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது போன்று எப்போது திருமணங்கள் இலகுவாகி விடுமோ அப்போது அங்கே விபச்சாரங்கள் இருக்காது. எங்கே திருமணங்கள் சிரமமாகிவிடுமோ அங்கே விபச்சாரங்கள் பெருகிவிடும்; அதிகமாகிவிடும். (4)
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 80.
 
அதைத்தானே இந்த சமுதாயத்திலே பார்க்கிறோம். அல்லாஹ் சுபஹானஹு தஆலா  நம் அனைவருக்கும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய சுன்னாவை பின்பற்றுவதற்குரிய நற்பாக்கியத்தை தருவானாக! அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் வரம்பு மீறுவதிலிருந்தும், எல்லை மீறுவதிலிருந்தும், அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் மாறு செய்வதிலிருந்தும் என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
سنن ابن ماجه 1895 - حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَالْخَلِيلُ بْنُ عَمْرٍو، قَالَا: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ خَالِدِ بْنِ إِلْيَاسَ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَعْلِنُوا هَذَا النِّكَاحَ، وَاضْرِبُوا عَلَيْهِ بِالْغِرْبَالِ» [حكم الألباني]ضعيف دون الشطر الأول فهو حسن
 
صحيح البخاري 2048 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمَّا قَدِمْنَا المَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، فَقَالَ سَعْدُ بْنُ الرَّبِيعِ: إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالًا، فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي، وَانْظُرْ أَيَّ [ص:53] زَوْجَتَيَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا، فَإِذَا حَلَّتْ، تَزَوَّجْتَهَا، قَالَ: فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ: لاَ حَاجَةَ لِي فِي ذَلِكَ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ؟ قَالَ: سُوقُ قَيْنُقَاعٍ، قَالَ: فَغَدَا إِلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ، فَأَتَى بِأَقِطٍ وَسَمْنٍ، قَالَ: ثُمَّ تَابَعَ الغُدُوَّ، فَمَا لَبِثَ أَنْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ عَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَزَوَّجْتَ؟»، قَالَ: نَعَمْ، قَالَ: «وَمَنْ؟»، قَالَ: امْرَأَةً مِنَ الأَنْصَارِ، قَالَ: «كَمْ سُقْتَ؟»، قَالَ: زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ - أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ -، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا بَهْزٌ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَا جَمِيعًا: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، وَهَذَا حَدِيثُ بَهْزٍ، قَالَ: لَمَّا انْقَضَتْ عِدَّةُ زَيْنَبَ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِزَيْدٍ: «فَاذْكُرْهَا عَلَيَّ»، قَالَ: فَانْطَلَقَ زَيْدٌ حَتَّى أَتَاهَا وَهِيَ تُخَمِّرُ عَجِينَهَا، قَالَ: فَلَمَّا رَأَيْتُهَا عَظُمَتْ فِي صَدْرِي، حَتَّى مَا أَسْتَطِيعُ أَنْ أَنْظُرَ إِلَيْهَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَهَا، فَوَلَّيْتُهَا ظَهْرِي، وَنَكَصْتُ عَلَى عَقِبِي، فَقُلْتُ: يَا زَيْنَبُ: أَرْسَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُكِ، قَالَتْ: مَا أَنَا بِصَانِعَةٍ شَيْئًا حَتَّى أُوَامِرَ رَبِّي، فَقَامَتْ إِلَى مَسْجِدِهَا، وَنَزَلَ الْقُرْآنُ، وَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ عَلَيْهَا بِغَيْرِ إِذْنٍ، قَالَ، فَقَالَ: وَلَقَدْ رَأَيْتُنَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْعَمَنَا الْخُبْزَ وَاللَّحْمَ حِينَ امْتَدَّ النَّهَارُ، فَخَرَجَ النَّاسُ وَبَقِيَ رِجَالٌ يَتَحَدَّثُونَ فِي الْبَيْتِ بَعْدَ الطَّعَامِ، فَخَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاتَّبَعْتُهُ، فَجَعَلَ يَتَتَبَّعُ حُجَرَ نِسَائِهِ يُسَلِّمُ عَلَيْهِنَّ، وَيَقُلْنَ: يَا رَسُولَ اللهِ، كَيْفَ وَجَدْتَ أَهْلَكَ؟ قَالَ: فَمَا أَدْرِي أَنَا أَخْبَرْتُهُ أَنَّ الْقَوْمَ قَدْ خَرَجُوا أَوْ أَخْبَرَنِي، قَالَ: فَانْطَلَقَ حَتَّى دَخَلَ الْبَيْتَ، فَذَهَبْتُ أَدْخُلُ مَعَهُ، فَأَلْقَى السِّتْرَ بَيْنِي وَبَيْنَهُ، وَنَزَلَ الْحِجَابُ، قَالَ: وَوُعِظَ الْقَوْمُ بِمَا وُعِظُوا بِهِ زَادَ ابْنُ رَافِعٍ فِي حَدِيثِهِ: {لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ} [الأحزاب: 53] إِلَى قَوْلِهِ {وَاللهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ} [الأحزاب: 53] (صحيح مسلم - 1428)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُوسَى بْنِ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، وَأَبِي الضُّحَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هِلَالٍ الْعَبْسِيِّ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: جَاءَ نَاسٌ مِنَ الْأَعْرَابِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِمِ الصُّوفُ فَرَأَى سُوءَ حَالِهِمْ قَدْ أَصَابَتْهُمْ حَاجَةٌ، فَحَثَّ النَّاسَ عَلَى الصَّدَقَةِ، فَأَبْطَئُوا عَنْهُ حَتَّى رُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ. قَالَ: ثُمَّ إِنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ جَاءَ بِصُرَّةٍ مِنْ وَرِقٍ، ثُمَّ جَاءَ آخَرُ، ثُمَّ تَتَابَعُوا حَتَّى عُرِفَ السُّرُورُ فِي وَجْهِهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَعُمِلَ بِهَا بَعْدَهُ، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا، وَلَا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، فَعُمِلَ بِهَا بَعْدَهُ، كُتِبَ عَلَيْهِ مِثْلُ وِزْرِ مَنْ عَمِلَ بِهَا، وَلَا يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»(صحيح مسلم - 1017)
 
குறிப்பு 4)
 
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَثْبُتَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا "(صحيح البخاري- 80)  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/