HOME      Khutba      தலைமைக்கு கீழ்ப்படிவோம் | Tamil Bayan - 567   
 

தலைமைக்கு கீழ்ப்படிவோம் | Tamil Bayan - 567

           

தலைமைக்கு கீழ்ப்படிவோம் | Tamil Bayan - 567


بسم الله الرحمن الرحيم
தலைமைக்கு கீழ்ப்படிவோம்
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இந்த மார்க்கத்தில் நமக்கு கொடுத்திருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு அருள், அல்லாஹ்வுடைய மிகப்பெரிய ஒரு நிஃமத் நமக்கு மத்தியில் இஸ்லாம் என்ற இந்த மார்க்கத்தின் மூலமாக, இந்த தீனின் மூலமாக நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய பகைமை குரோதம் மனக்கசப்பை எல்லாம் அல்லாஹு தஆலா நீக்கி விடுகிறான். இஸ்லாம் என்ற இந்த அருளின் மூலம் நமக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கிறான்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா கண்ணியத்திற்குரிய அவனுடைய வேதத்திலே கூறுகின்றான்; 
 
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
 
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 3 : 103)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் வருவதற்கு முன்னர் அரபுகள் பல கூட்டங்களாக கோத்திரங்களாக பிரிந்துகொண்டு ஒருவர் மற்றவரின் ரத்தங்களை ஓட்டக்கூடியவர்களாக, ஒருவர் மற்றவர் மீது பகைமை பாராட்டக்கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இந்த இஸ்லாம் என்ற அருளை கொடுத்து அவர்கள் மத்தியில் அன்பையும் நேசத்தையும் இவர்களுக்கு மத்தியில் ஈமான் என்ற பலத்தையும் கொடுத்தான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அருளில் ஒன்று நாம் ஒற்றுமையாக இருப்பது.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா ஒற்றுமையை வலியுறுத்துகின்றான். அல்லாஹ் அவனுடைய வேதம் கண்ணியத்திற்குரிய அல்குர்ஆனிலே இதைக்குறித்து கூறும்பொழுது, 
 
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
 
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8 : 46)
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா உடைய இந்த வசனத்தை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் ஒற்றுமையாக இருப்பது அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் செயலாகும். நாம் ஒற்றுமையாக இருப்பது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கட்டுப்படும் கடமையாகும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருவதற்கு முன்பாக வாழ்ந்த அந்த அரபியர்கள் பிரிந்தவர்களாக இருந்தனர். ஆகவே அந்தக் காலத்தை அய்யாமுல் ஜாஹிலிய்யா பிரிந்து இருக்கும் குணத்தை அய்யாமுல் ஜாஹிலிய்யா -முஷ்ரிக்குகள் உடைய குணம் ஆக கூறுகிறது 
ஒற்றுமையாக சேர்ந்து இருப்பதை, ஒரு தலைமைக்கு கீழ் கட்டுப்பட்டு பெரிய ஜமாத்தாக இருப்பதை அல்லாஹ்வுடைய மார்க்கம், ஈமான் இஸ்லாம் என்பதாக கூறுகிறது. நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்; 
 
فَإِنَّ يَدَ اللَّهِ عَلَى الْجَمَاعَةِ
 
அல்லாஹ்வுடைய கை ஜமாஅத்தின் மீது இருக்கிறது; அல்லாஹ்வுடைய உதவி அந்த ஆதரவு பொறுமையாக இருக்கக்கூடிய அந்த மக்களுக்கு இருக்கிறது.
(1) அறிவிப்பாளர்: அர்ஃபஜா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: நசாயி, எண்: 3469, 4020
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மேலும் இதை எச்சரிக்கையாக அழுத்தம் திருத்தமாக கண்டிப்பாக சொன்னார்கள்; 
யார் ஜமாத்தை விட்டு பிரிவாரோ அவர்கள் நரகத்தில் தான் பிரிவார். யார் ஜமாத்தை விட்டு விலகுவாரோ அவர்கள் விலகிச் செல்வது நரகத்திற்கு தான் இருக்கும்.
(2) அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 2167
 
அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் ஏராளமான ஹதீஸ்களை நமக்கு வலியுறுத்தி சென்றிருக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் எப்படி ஒற்றுமையாக. ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்?. நம் நாடுகளில் இருக்கும் அமீருக்கு மட்டுமல்ல ; முஸ்லிம் நாடுகளில் இருக்கும் இமாமிற்கு கலீபாவிற்கு ஹாகிமிற்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்.
 
பிரிவினை செய்வதையும் சண்டை செய்வதையும் குழப்பம் செய்வதையும் அல்லாஹ்வுடைய மார்க்கம் கண்டிப்பாக தடுக்கிறது. அதற்குரிய வரம்புகளும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அழகாக நமக்கு வரையறுத்து கூறியுள்ளார்கள்.
 
நீங்கள் நினைக்கலாம்; நம்முடைய மன்னர்கள் ஆட்சி செய்பவர்கள் அநியாயம் செய்கிறார்களே! அல்லாஹ்வுக்கு மாறு செய்கிறார்களே! என்ன செய்ய வேண்டும் என்பதாக? சகோதரர்களே! இவற்றைப் பற்றிய கேள்விகளை எல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலேயே கேட்கப்பட்டது நபி (ஸல்) தெளிவான பதிலையும் கொடுத்திருக்கிறார்கள்.
 
இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கக்கூடிய ஒரு ஹதீஸ்; இந்த ஹதீஸை ஆழ்ந்து கவனியுங்கள்; முஸ்லிம்  எண் -534
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இடத்தில் கேட்கிறார்கள்; அபூதர் அவர்களே உங்களுடைய அதிகாரிகள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழ வைக்காமல் தாமதப்படுத்தினால் நீ என்ன செய்வாய்?  எப்படிப்பட்ட கேள்வியை ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் முன்வைக்கிறார்கள் பாருங்கள். முஸ்லிம்களுக்கு தொழுகையை விட மிகப்பெரிய காரியம் ஒன்றும் கிடையாது.
 
முஸ்லிம்களில் அதிகாரியாக இருப்பவர்கள்தான் தொழுகையை நடத்த வேண்டும். இந்தத் தொழுகைக்கு அவர்கள் தாமதமாக வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது. அபூதர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! நீங்களே எனக்கு வழிகாட்டுங்கள்.
 
நீங்கள் தொழுகையை எதிர்பார்த்து இருக்க உங்களுக்கு தொழுகையை நடத்தக்கூடிய அமீர் தாமதமாக வந்தால், நீ அந்தத் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விடு. அந்த அமீர் தாமதமாக வந்து தொழுகை நடத்தினால் அவரோடு சேர்ந்து தொழுது கொள். இந்த இரண்டாவது தொழுத தொழுகை உனக்கு நஃபிலாக இருக்கும் என்று கூறினார்கள்.
(3) அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 534
 
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒற்றுமையை ஜமாஅத்தை எவ்வளவு அழுத்தமாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வலியுறுத்தியிருக்கிறார்கள். பிரிவினையை பிரிந்து செல்வதை எவ்வளவு தெளிவாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்திருக்கிறார்கள். 
 
அவர்கள் தாமதமாக வந்தால் அவர்களை நீ பொருட்படுத்தாதே! நீ தொழுது விட்டு உன்னுடைய வீட்டிற்கு சென்று விடு என்று சொன்னார்களா? அல்லது நீ அமீராக நின்று முஸ்லிம்களுக்கு ஜமாஅத்தாக தொழுகை நடத்தி விடு என்று சொன்னார்களா? இல்லை. 
 
நீ தனிப்பட்ட முறையில் முன்பரிதாக நீ தொழுது கொள். இந்த இமாம் மஸ்ஜித்துக்கு வந்து தொழுகை நடத்தினால் அவரோடு நீ தொழுது கொள்.ஜமாத்தை விட்டு பிரிவதை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எவ்வளவு வருத்தமான செயலாக. மிகப்பெரிய ஒரு ஆபத்தான செயலாக கண்டார்கள்.
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த தொலைநோக்கை யார் தன்னுடைய ஞானத்தையும் நுட்பத்தையும் அதில் இருக்கக்கூடிய நன்மையையும் ஆழ்ந்து சிந்திப்பார்களோ அவர்களுக்குப் புரிய வரும். பிரிவினையாலும் குழப்பங்களாலும் கலகங்களாலும் ஏற்படக்கூடிய தீமையை படிப்பினை கண்களால் யார் பார்ப்பார்களோ அவர்களுக்கு இந்த நபிமொழி புரியும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தலைமைக்கு கட்டுப்படுவதை அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுவதாக ஆக்கினார்கள். முஸ்லிம்கள் ஒரு ஜமாஅத்தாக இருக்க வேண்டும். ஒரு தலைமைக்கு கீழ் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் அவர்கள் பிரியக்கூடாது. இதுதான் அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் அடிப்படை சட்டம். 
 
அவர்கள் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாட்டிலே முஸ்லிம்கள் ஆட்சியாளராக இருக்கும் நாட்டிலே இருந்தாலும் சரி, அல்லது வேறு நாடுகளில் அவர்கள் இருந்தாலும் சரி. தங்களுக்குரிய ஒரு தலைமையில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். 
 
இன்று நமது நிலை எப்படி இருக்கிறது? ஒரு ஜமாத்தை உருவாக்குவார்கள். அந்த ஜமாத்தை உருவாக்கியவர்கள் இடையில் ஏதாவது சிறு மனக்கசப்புகள். ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் உடனடியாக அவர் வெளியேறி அவர் ஒரு ஜமாத்தை ஏற்படுத்துவது. எப்படி தாய் தந்தையில் இருந்து பல பிள்ளைகள் பிறக்கிறார்களோ. அதுபோன்று ஒரு ஜமாத்தில் இருந்து 100 ஜமாத்தார்கள் பிறக்கக் கூடிய அவல நிலையை நாம் பார்க்கிறோம்.
 
சின்னச்சின்ன அர்ப்ப காரணங்களுக்காக பிளவுகளையும் குழப்பங்களையும் சந்திக்கக்கூடிய சமுதாயமாக இன்று நமது சமுதாயம் இருக்கிறது. மாற்றார்கள் நம்மை பார்த்து பரிகாசிக்கிறார்கள். உங்களுக்கு ஒரு வேதம் இருக்கிறது; ஒரு கிப்லா இருக்கிறது; ஒரே சமுதாயம் என்று கூறுகிறீர்கள்; ஆனால் உங்களுக்குள் இவ்வளவு ஜமாத்தா?  உங்களுக்குள் இத்தனை இயக்கங்களா? உங்களுக்குள் இத்தனை தலைவர்களா? என்பதாக.
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஒற்றுமையை வலியுறுத்தி அந்த தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் தலைமையில் சில வெறுப்புகளை நாம் கண்டாலும் சரி. அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சரி. இதை எவ்வளவு அழகாக தெளிவு படுத்தினார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அறிவித்ததாக புகாரியில் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள். 
 
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «السَّمْعُ وَالطَّاعَةُ عَلَى المَرْءِ المُسْلِمِ فِيمَا أَحَبَّ وَكَرِهَ، مَا لَمْ يُؤْمَرْ بِمَعْصِيَةٍ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ» (صحيح البخاري 7144 -)
 
ஒரு முஸ்லிம் கண்டிப்பாக அவனது தலைமைக்குக் கீழ்படிய வேண்டும். அந்தத் தலைமையின் கட்டளைக்கு அவன் செவிசாய்க்க வேண்டும். அது தனக்கு பிரியமாக இருந்தாலும் சரி. அல்லது தனக்கு வெறுப்பாக இருந்தாலும் சரி. ஒரு முஸ்லிம் சுயநலன் உடையவனாக தன்னைத்தானே பெரியவனாக கருதிக்கொண்டு தனது கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதால் சமுதாயத்தை பிளவுபடுத்துபவனாக இருக்கக் கூடாது. தான் விரும்பியதை ஏற்றுக் கொண்டாலும் சரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி தனது தலைமைக்கு அவன் கட்டுப்பட்டே ஆகவேண்டும். அந்தத் தலைமை ஒரு பாவத்தை செய்யும்படி வலியுறுத்தினாலே தவிர. 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 7144
 
لا طاعة لمخلوق في معصية الله
 
அல்லாஹ்வுக்கு மாறு செய்யக்கூடிய விஷயத்தில் படைப்பினங்களில் யாருக்கும் கட்டுப்பட முடியாது. 
 
அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் அஸ் ஸுலமி ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹமத், எண்: 1095
 
ஒரு பாவத்தை குர்ஆனிலும் ஸுன்னாவிலும் அறியப்பட்ட ஒரு பாவத்தை ஒரு தவறை செய்யுமாறு தூண்டினாலே தவிர எந்த சூழ்நிலையிலும் தனது அமீருக்கு கட்டுப்படாததை அல்லாஹ்வுடைய மார்க்கம் அங்கீகரிக்கவில்லை. 
 
இமாம் அஹமத் அறிவிக்கக்கூடிய மற்றொரு ஹதீஸை பாருங்கள்;
 
சிலர் தன்னுடைய கவர்னர்களை அவர்களுடைய சுல்தான்களை அவர்களுடைய அமீர்களை அவர்களுடைய தவறுகளுக்காக இழிவு படுத்துகிறார்கள்; தரக்குறைவாக பேசுகிறார்கள்; 
 
عَنْ أَبِي بَكَرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَكْرَمَ سُلْطَانَ اللَّهِ فِي الدُّنْيَا، أَكْرَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ أَهَانَ سُلْطَانَ اللَّهِ فِي الدُّنْيَا، أَهَانَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ»  (مسند أحمد 20433 -)
யார் அந்த சுல்தானை கண்ணியப்படுத்துகிறாரோ அல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்துவான். யார் அந்த சுல்தானை கேவலப்படுத்துகிறாரோ அல்லாஹ் அவர்களை கேவலப்படுத்துவான். 
 
அறிவிப்பாளர்: அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹமத், எண்: 20433
 
யார் தனது ஆட்சியாளரை கண்ணியப்படுத்துவாரோ மக்கள் அவரை தேர்ந்தெடுத்தாலும் சரி, அல்லது அவராக தன்னுடைய பலத்தின் மூலமாக மக்களின் மீது ஆதிக்கம் பெற்றிருந்தாலும் சரி, அல்லாஹ்வின் தூதர் அவர்களை சுல்தானுல்லாஹ். அல்லாஹ்வின் சுல்தான் –அல்லாஹ்வின் மூலமாக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சுல்தான் என்று கூறுகிறார்கள். 
 
காரணமென்ன? ஆட்சியை கொடுப்பவனும் அல்லாஹ் ஆட்சியை பிடுங்க கூடியவனும் அல்லாஹ்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்; 
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَطَاعَنِي، فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي، فَقَدْ عَصَى اللَّهَ، وَمَنْ أَطَاعَ الْإِمَامَ، فَقَدْ أَطَاعَنِي، وَمَنْ عَصَى الْإِمَامَ، فَقَدْ عَصَانِي» (سنن ابن ماجه 2859 -)
 
யார் எனக்கு கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர் ஆவார். யார் எனக்கு மாறு செய்வார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் ஆவார்கள். யார் அமீருக்கு கீழ்ப்படிவாரோ அவர் எனக்கு கீழ்படிந்தார். யார் அவருக்கு மாறு செய்வாரோ அவர் எனக்கு மாறு செய்தவராவார். 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா, எண்: 2859
 
மேலும் புகாரி ரஹிமஹுல்லாஹ் அறிவிப்பை பாருங்கள்; இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்கள்;
 
عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ كَرِهَ مِنْ أَمِيرِهِ شَيْئًا فَلْيَصْبِرْ، فَإِنَّهُ مَنْ خَرَجَ مِنَ السُّلْطَانِ شِبْرًا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً» (صحيح البخاري 7053 -)
 

தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; யார் ஒருவன் தன்னுடைய அமீரிடம் தான் விரும்பாத ஒன்றை பார்ப்பாரோ அவர் அந்த மன்னரோடு பொறுமையாக இருக்கட்டும். மன உறுதியோடு இருக்கட்டும் . விட்டு பிரிந்து விட வேண்டாம்.

ஏன் தெரியுமா? யார் தன்னுடைய அமீரை விட்டு இன்றைய மன்னரை விட்டு விலகி அதே நிலையில் அவர் மரணித்து விட்டாரோ, தன்னுடைய மன்னரை வெறுத்து அவரிடம் செய்த ஒப்பந்தத்தை மறுத்து யார் வெளியேறுகிறாரோ அவர் அதே நிலையில் இறந்து விடுவாரோ. அவருடைய மரணம் குஃப்ருடைய மரணம். அவருடைய மரணம் ஜாஹிலிய்யத் உடைய மரணம். அதாவது அவர் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிய நிலையில் மரணித்தார். 
 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 7053
 
அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னும் அழுத்தமான மிகவும் ஆணித்தரமான எச்சரிக்கையை கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். தன்னுடைய அமீருக்கு கட்டுப்படாமல் இருப்பதையும் அவரைவிட்டு விலகுவதையும் அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் எந்த அளவு கண்டித்தார்கள் என்றால்? யார் அப்படி விலகுவாரோ அப்படி விலகிய நிலையில் மரணித்து விட்டால், (அல்லாஹ்வுடைய சட்டம் தெரிந்தவராக இருக்கலாம், தஹஜ்ஜுத் தொழக்கூடியவராக இருக்கலாம், மார்க்க சட்டத்தை நுணுக்கமாக பேணக் கூடியவராக இருக்கலாம்) ஆனால் ஜமாஅத்தை விட்டு விலகி அவராக இறப்பாரோ அவர் தன்னுடைய வணக்க வழிபாட்டில் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் சரி, அவர் அந்த வணக்க வழிபாட்டை கொண்டு திருப்தி அடைந்தாலும் சரி,
அல்லாஹ் அவர்களுடைய வணக்க வழிபாட்டை கொண்டு திருப்தி அடைய மாட்டான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய வணக்க வழிபாட்டை கொண்டு திருப்தி அடையமாட்டார்கள். 
 
அல்லாஹ்வுடைய பார்வையில் அல்லாஹ்வுடைய நபியின் பார்வையில் அவருடைய மரணம் ஒரு ஜாஹிலிய்யத் உடைய மரணம். 
 
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மற்றொரு ஹதீஸின் பதிவு; இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அறிவிப்பு செய்திருக்கிறார்கள்;
 
عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «سَتَكُونُ أَثَرَةٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «تُؤَدُّونَ الحَقَّ الَّذِي عَلَيْكُمْ، وَتَسْأَلُونَ اللَّهَ الَّذِي لَكُمْ» (صحيح البخاري 3603 -)
 
ஒரு காலம் வரும். செல்வங்களையெல்லாம் ஆட்சியாளர்கள் வைத்துக் கொள்வார்கள். சொத்தை எல்லாம் தங்கள் குடும்பத்துக்குள் பங்கு வைத்துக் கொள்வார்கள். உங்களுக்கு  பிடிக்காத பல காரியங்களை இவர்களிடம் நீங்கள் பார்ப்பீர்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உருவாக்கிய அந்த சஹாபாக்கள் மார்க்கத்திலே எப்பேர்ப்பட்ட பிடிப்புடையவர்கள்.? உயிர் போனாலும் சரி. இஸ்லாத்தில் எந்த குறையும் ஏற்படக்கூடாது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் எந்தக் குறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களிடம் இருந்த வீரம் ரோஷதுக்கு முன்னால் நம்முடைய வீரமும் ரோஷமும் என்ன என்று சொல்வது?
 
ஸஹாபாக்கள் கேட்டார்கள்; இந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு என்ன கட்டளை கொடுக்கின்றீர்கள்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; உங்கள் மீது அல்லாஹ் எதை கடமையாக்கினானோ அதை நீங்கள் செய்யுங்கள்; உங்களுக்குரிய ஹக்கை நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேளுங்கள்.
 
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 3603
 
அழகான ஒரு வழிகாட்டலை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். இன்று நாம் முஸ்லிம் நாடுகளில் நடந்து முடிந்த பார்த்து வரும்போது உங்களுக்கு இது புரிய வரும். சரியாக இருந்த நாடுகள் சில சில காரணங்களுக்காக வீதிக்கு வந்து போராடியவர்கள் இன்று நாட்டையே துறந்துவிட்டு வேற நாடுகளிலே அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
பலர் கிறிஸ்துவ மதத்திற்கு சென்றுவிட்டார்கள். பலர் பெரும் பாவங்களில் விழுந்து விட்டார்கள். பல ஆயிரம் குழந்தைகள் தந்தையும் இல்லாமல் தாயும் இல்லாமல் தவிப்பதை நாம் பார்க்கிறோம். 
 
ஒரு சில சலுகைகளை வேண்டிப் போராட ஆரம்பித்தவர்களின் முடிவு என்ன? முஸ்லிம் நாடுகள் இன்று காங்கிரீட் சுடுகாடுகளாக மாறிவிட்டதை நாம் பார்க்கிறோம். லட்சக்கணக்கான மஸ்ஜித்கள் தரைமட்டமாகி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். முஸ்லிம்களின் லட்சக்கணக்கான வீடுகள் அழிந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். லட்சக்கணக்கான மக்கள் நீங்கள் கொல்லப்பட்டதை பார்த்திருப்பீர்கள்.
 
இதற்குக் காரணம் என்ன நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறையை பின்பற்றாமல் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை கம்யூனிச வாதிகள் இன்னும் முதலாளித்துவ கொள்கை உடையவர்களின் வழிகாட்டுதல் மூலமாகவும் தீர்த்துக்கொள்ள நினைத்தார்கள். 
 
யார் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் வழிகாட்டுதல் இல்லாத ஒன்றிலே தன் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தேடுவார்களோ உங்களுக்கு பிரச்சனை ஒன்றல்ல ஆயிரம் அதிகமாகுமே தவிர மக்களின் பிரச்சனை ஒரு சிறு துளி கூட நிறைவேறாது. என்பதை முஸ்லிம்களாகிய நாம் கண்டிப்பாக நம்ப வேண்டும். 
 
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு செல்லக்கூடிய வழிகாட்டுதலை பாருங்கள்; 
ال عبد الله بن مسعود رضي الله عنه:إذا كان الإمام عادلاً فله الأجر وعليك الشكر وإذا كان جائرا فعليه الوزر وعليك الصبر. عيون الأخبار(49/1)
 
உங்களுடைய இமாம் உங்களுடைய ஆட்சியாளர் நீதமானவராக இருந்தால் அல்லாஹ் அவருக்கு கூலி கொடுக்க போகிறான்; நீங்கள் அதற்காக அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவர்களாக அந்த இமாமுக்கும் நன்றியுள்ளவர்களாக இருங்கள் 
 
அந்த இமாம் தவறானவராக நீதத்தை பேணாதவராக இருந்தால். அது அவரைச் சாரும்; நீங்கள் பொறுமையாக இருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு அல்லாஹ் உதவுவான். 
 
قال أبو الدرداء رضي الله عنه: ( إن أول نفاق المرء طعنة على إمامه) . البيهقي- شعب الإيمان 
 
அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்; ஒரு மனிதனுடைய நயவஞ்சகத்தனத்திற்கான முதல் அடையாளம், அவன் தனது ஆட்சியை குறை கூற ஆரம்பித்து விடுவான். 
 
அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு எவ்வளவு ஆழமாக மார்க்கத்தைப் புரிந்து கூறி இருக்கிறார்கள் பாருங்கள். ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த முனாஃபிக்குகளின் வேலை என்னவென்றால் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களை குறை கூறுவது; சஹாபாக்கள் காலத்தில் யார் அவர்களுக்கு ஆட்சியாளராக இருந்தார்களோ அவர்களை குறை சொல்வது. பிறகு அபூபக்ர், உமர், உஸ்மான் என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை எல்லாம் குறை கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிராக பிரச்சனைகளை உண்டாக்கி கொண்டிருந்தார்கள். 
 
இதை நன்கு கவனித்த அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்; ஒரு மனிதனுடைய ஈமான் மாற்றமடைய ஆரம்பித்துவிட்டது, ஒரு மனிதனிடத்தில் ஈமானுக்கு பதிலாக குஃப்ர் முளைக்க ஆரம்பித்துவிட்டது என்பதற்க்கான முதல் அடையாளம் அவன் தன்னுடைய ஆட்சியாளரை குறை கூற ஆரம்பிப்பான்; தனது ஆட்சியாளரை குத்தி பேச ஆரம்பிப்பான்.
 
இமாம் ஃபுழைழ் இப்னு இயாழ் ரஹிமஹுல்லாஹு அவர்கள் கூறுகிறார்கள்; இமாம் மிகப்பெரிய ஒரு தாபியின் ஆவார். எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு துஆ இருக்கிறது என்றால் அந்த துஆவை நான் எனது மன்னருக்காக செய்வேன்; யா அல்லாஹ்! இந்த மன்னரை சீர்திருத்தி வை !என்று கேட்பேன்.
 
காரணம் என்ன? அந்த துஆவை நான் எனக்காக செய்துகொண்டால் அது எனக்குத்தான் நன்மையாக முடியும். அந்த துஆவை நான் எனது மன்னனுக்காக செய்தால் மன்னர் சீர்திருத்தி விடுவார். மக்கள் எல்லாம் சீர்திருத்தி விடுவார்கள். அதிலே அல்லாஹ்வுடைய அடியார் எல்லோருக்கும் நன்மை இருக்கிறது. என்று கூறினார்கள்.
 
ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத் இமாம்கள் அனைவரும் தாங்கள் எழுதிய அகீதா கிதாபுகளில் -கொள்கை விளக்க நூல்களில் கண்டிப்பாக இந்த அகீதாவை திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு ஜமாத்தாக இருக்க வேண்டும்; ஒரு இமாமுக்கு கட்டுப்பட வேண்டும்; அந்த இமாமை விட்டு ஒருபோதும் விலகி பிரிந்து இருக்கக் கூடாது என்பதாக.
 
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹு கூறுகிறார்கள்; 
 
السلطان ظل الله في الارض
பூமியிலே மன்னராக இருப்பவர் அல்லாஹ்வின் அருளின் நிழலில் இருக்கிறார். 60 ஆண்டுகள் அநியாயக்கார ஒரு மன்னருக்கு கீழ் வாழ்வது மன்னர் இல்லாமல் ஓரிரவு வாழ்வதை விட சிறந்ததாகும்.
 
அன்பு சகோதரர்களே! சமீபகாலத்தில் நடந்து முடிந்த மிஸ்ரு உடைய குழப்பம் உங்களுக்கு தெரியாமல் இருக்காது. எப்பொழுது அவர்கள் தங்கள் ஆட்சியாளர்களை குழப்பம் செய்து அகற்ற வேண்டும் என்று நினைத்தார்களோ அடுத்த ஆட்சி ஏற்படுவதற்கு முன்பாக அந்த ஒரு சில நாட்களில் எத்தனை கோடான கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டன, எத்தனை கொலைகள் நடந்தன, எத்தனை கற்பழிப்புகள் நடந்தன,. இன்னும் எத்தனை எத்தனையோ ஆபத்துக்கள் அங்கே நடந்தன என்பதை நீங்கள் வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் படித்துப் பாருங்கள்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! குறிப்பாக நமது மார்க்கம் நமக்கு கொடுக்கக்கூடிய மிக அழுத்தமான கட்டளை. கண்டிப்பான கட்டளை, தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் நமக்கு எப்படி அல்லாஹ்வுடைய சட்டமோ அதுபோன்றுதான் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தங்களுக்கு மத்தியில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளினால் அவர்கள் கூட்டங்களாக. குழுக்களாக பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது; அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி பிரிவதை மிகவும் வன்மையாக கண்டித்தார்கள்.
 
இன்று கூட்டங்களாக குழுக்களாக பிரிந்திருக்கும் நம் முஸ்லிம்களின் நிலையை பாருங்கள். ஒரு பிரிவு இன்னொரு பிரிவுக்கு சலாம் சொல்வதில்லை. ஒருவர் சலாம் சொன்னால் அந்த ஸலாமுக்கு பதில் சொல்வதில்லை. ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரை பார்க்கும் போது முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறார்கள் என்றால்  இந்த பிரிவினை அவர்களின் உள்ளத்தில் எத்தகைய குரோதத்தை பொறாமையை போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. 
 
தன்னுடைய சகோதரர் இழிவு அடைவதை விரும்பக்கூடிய நிலையில் . இன்றைய சமுதாயப் பிரிவுகள் மாறியிருக்கின்றன. அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்! அல்லாஹ்வுடைய வேதத்தை நாம் நம்புவது உண்மையாக இருக்குமானால் .அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் நாம் கட்டுப்படுகிறோம் என்பது உண்மையானால் நமக்கு மத்தியில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் குழப்பங்களை விட்டுவிட்டு நாம் ஒரே சமுதாயமாக அல்லாஹ்வின் வேதத்தை பற்றி பிடித்தவர்களாக மாற வேண்டும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்;
 
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌
 
அல்லாஹ்வுடைய கயிறாகிய குர்ஆனை நீங்கள் ஒன்றுசேர்ந்து பற்றிப் பிடியுங்கள் நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 3 : 103)
 
இந்த வழிகாட்டலுக்கு ஏற்ப நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லாவிதமான செயல்பாடுகளையும் ஆக்கிக்கொள்ள வேண்டும். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்கும் நமது தலைவர்களுக்கும் உம்மத்துக்கும் சரியான ஒரு பாதையை காட்டுபவர்களாக இந்த உம்மத்தை இழிவுபடுத்த கூடிய, பலவீனப்படுத்த கூடிய எல்லா விதமான சிறிய பெரிய தீமைகளை விட்டும் உம்மத்தையும் உம்மத்தின் தலைவர்களையும் பாதுகாப்பானாக! மறுமைக்கும் நமது தீனுக்கும் நமக்கும் நமது தலைவர்களுக்கும் அல்லாஹு தஆலா வழி காட்டுவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَرْدَانِبَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ عَرْفَجَةَ بْنِ شُرَيْحٍ الْأَشْجَعِيِّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ النَّاسَ، فَقَالَ: «إِنَّهُ سَيَكُونُ بَعْدِي هَنَاتٌ وَهَنَاتٌ، فَمَنْ رَأَيْتُمُوهُ فَارَقَ الْجَمَاعَةَ، أَوْ يُرِيدُ يُفَرِّقُ أَمْرَ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَائِنًا مَنْ كَانَ فَاقْتُلُوهُ، فَإِنَّ يَدَ اللَّهِ عَلَى الْجَمَاعَةِ، فَإِنَّ الشَّيْطَانَ مَعَ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ يَرْكُضُ» (سنن النسائي- 4020)
குறிப்பு 2).
 
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ البَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ الْمَدَنِيُّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ لاَ يَجْمَعُ أُمَّتِي، أَوْ قَالَ: أُمَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى ضَلاَلَةٍ، وَيَدُ اللهِ مَعَ الجَمَاعَةِ، وَمَنْ شَذَّ شَذَّ إِلَى النَّارِ. (سنن الترمذي-2167)
குறிப்பு 3).
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، وَعَلْقَمَةَ، قَالَا: أَتَيْنَا عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ فِي دَارِهِ، فَقَالَ: أَصَلَّى هَؤُلَاءِ خَلْفَكُمْ؟ فَقُلْنَا: لَا، قَالَ: فَقُومُوا فَصَلُّوا، فَلَمْ يَأْمُرْنَا بِأَذَانٍ وَلَا إِقَامَةٍ، قَالَ وَذَهَبْنَا لِنَقُومَ خَلْفَهُ، فَأَخَذَ بِأَيْدِينَا فَجَعَلَ أَحَدَنَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ، قَالَ: فَلَمَّا رَكَعَ وَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا، قَالَ: فَضَرَبَ أَيْدِيَنَا وَطَبَّقَ بَيْنَ كَفَّيْهِ، ثُمَّ أَدْخَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ، قَالَ: فَلَمَّا صَلَّى، قَالَ: «إِنَّهُ سَتَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مِيقَاتِهَا، وَيَخْنُقُونَهَا إِلَى شَرَقِ الْمَوْتَى، فَإِذَا رَأَيْتُمُوهُمْ قَدْ فَعَلُوا ذَلِكَ، فَصَلُّوا الصَّلَاةَ لِمِيقَاتِهَا، وَاجْعَلُوا صَلَاتَكُمْ مَعَهُمْ سُبْحَةً، وَإِذَا كُنْتُمْ ثَلَاثَةً فَصَلُّوا جَمِيعًا، وَإِذَا كُنْتُمْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، فَلْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ، وَإِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيُفْرِشْ ذِرَاعَيْهِ عَلَى فَخِذَيْهِ، وَلْيَجْنَأْ، وَلْيُطَبِّقْ بَيْنَ كَفَّيْهِ، فَلَكَأَنِّي أَنْظُرُ إِلَى اخْتِلَافِ أَصَابِعِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرَاهُمْ» (صحيح مسلم  - 534)
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/